Don't Miss!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பாகிஸ்தான் சென்று பாட விரும்புகிறேன்: லதா மங்கேஷ்கர்
பாகிஸ்தானின் டான் டிவிக்கு லதா மங்கேஷ்கர் இதுதொடர்பாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பேட்டியின்போது லதா கூறுகையில், நான் இதுவரை பாகிஸ்தான் சென்றதில்லை. ஜியா உல் ஹக் அதிபராக இருந்தபோது அங்கு செல்ல ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்தாகி விட்டது.
எல்லாம் முடிந்த நிலையில் திடீரென பயணம் ரத்தாகி விட்டது. நிகழ்ச்சியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததால் நான் போகவில்லை என்றார் லதா.
பேட்டியின்போது பேட்டி கண்டவர் லதாவிடம், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான் கவிஞர் ஒருவர் ஒரு கவிதை எழுதியதாகவும், அதில், டீக் கடையில் ஒரு இந்தியரும், ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்தவரும் காஷ்மீர் தொடர்பாக கடுமையாக வாதிடுவதாகவும், அப்போது லதா மங்கேஷ்கரின் பாடல் ஒலித்ததைக் கேட்டு இருவரும் சண்டையை நிறுத்தி
சமாதானமாக போவதாகவும் கவிதையில் கூறியிருப்பதாக தெரிவித்தார்.
அதைக் கேட்ட லதா, நிஜத்திலும் இப்படி நடந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். எனக்கு பாகிஸ்தான் வர விருப்பம்தான். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு யாருமே அழைப்பு விடுக்கவில்லையே. யாராவது என்னை அழைத்தால் நிச்சயம் நான் வரத் தயார் என்றார்.
தொடர்ந்து லதா பேசுகையில், எனக்கும், பாகிஸ்தானின் இசையரசி நூர்ஜஹானுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு நூர்ஜஹான் பாகிஸ்தான் போய் விட்டார். இருந்தாலும் தினசரி நான் போன் செய்து அவருடன் பேசுவேன். தொடர்ந்து இருவரும் நல்ல நட்புடன் இருந்தோம். ஆனால் பாகிஸ்தானுக்கு நூர்ஜஹான் போன பின்னர் நான் அவரை சந்திக்க முடியாமல் போய் விட்டது என்றார். நூர்ஜஹான் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லதா தற்போது எல்லைகள் என்ற பெயரில் ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கி வருகிறார். இதில் நான்கு இந்திய பாடகர்களும், நான்கு பாகிஸ்தானிய பாடகர்களும் பாடியுள்ளனர். இதுவரை 3 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சில பாடல்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் லதா குறிப்பிட்டார்.
--