Don't Miss!
- Technology அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர், நடிகையர்களுக்கு நல வாரியம்- முதல்வரிடம் கோரிக்கை
நடிகர் நடிகைகளுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்ட பிரதிநிதிகள் முதல்வர் கருணாநிதியிடம் வற்புறுத்தினர்.
நடிகைகள் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட நாளிதழின் ஆசிரியர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சங்கத்தின் பிரதிநிகள் இன்று பிற்பகல் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் நன்றி தெரிவித்துப் பேசினர்.
பின்னர் வெளியில் வந்த நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் ராதாரவி நிருபர்களிடம் பேசியதாவது:
எங்கள் வேதனையை உணர்ந்து உடனே நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வர். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தோம்.
இன்று வேறொரு கோரிக்கையையும் வைத்தோம். நடிகர் நடிகைகளுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பதே அது. இந்த வாரியம் மூலம் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். நல உதவிகள், சட்ட உதவிகள், காப்பீடு, உதவித் தொகை என அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார். நம்பிக்கையுடன் உள்ளோம் என்றார்.