Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ஆஸ்கர் மீது நெப்போலியன் கோபம்!
இந்தப் படத்தில் நெப்போலியன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இந் நிலையில், ரவிச்சந்திரன் மீதும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மீதும் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் நெப்போலியன்.
அவர் கூறியதிலிருந்து...
"தசாவதாரம் படத்தில் நான் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதைத் தவிர வேறு பல உதவிகளையும் இந்தப் படம் தடையின்றி உருவாகும் வகையில் செய்து கொடுத்திருக்கிறேன். அண்ணா அறிவாலயத்துக்குள் முதல் முறையாக ஒரு திரைப்பட ஷூட்டிங் நடந்தது என்றால் அது தசாவதாரத்துக்காகத்தான். அதற்கான அனுமதியை நான்தான் பெற்றுத் தந்தேன்.
அதே போல அரசின் அனுமதி தேவைப்பட்ட பல இடங்களில் நான்தான் முன்னின்று அதைப் பெற்றுத் தந்தேன். ஆனால் தசாவதார ஆடியோ விழாவில் ஒரு சிறு மரியாதைக்குக் கூட என் பெயரை குறிப்பிடவில்லை. படத்தின் இயக்குநர் ரவிக்குமார் மீது எனக்கு பெரும் மரியாதையுண்டு. அவரது ஊர் மரியாதை படத்தில் நானும் சரத்தும்தான் நாயகர்கள்.
ஆனால் அவர்கூட தனது பேச்சில் படத்தில் பங்குபெற்ற அனைவரின் பெயரையும் குறிப்பிட்டார். ஆனால் என் பெயரை கடைசிவரை சொல்லவே இல்லை. அந்த விழாவில் நானும்தான் முதல்வருடன் போய் கலந்து கொண்டேன்.
அட, இத்தனை நாட்களுக்குப் பிறகும்கூட, தயாரிப்பாளரோ, இயக்குனரோ என்னிடம் ஒரு பேச்சுக்குக் கூட நன்றி தெரிவிக்கவில்லை. பெரிய படம், நல்லா ஓடட்டும்... ஆனால் உதவி செய்தவர்களை அதுவும் பல சிக்கல்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவித்த ஒரு படத்துக்கு உதவி செய்த எனக்கு ஒரு நன்றி சொல்லக்கூட அவர்களுக்குத் தோனலையே..." என்றார் வேதனையோடு.
ஆஸ்கர், கே.எஸ்.ஆர். பதில் என்னவோ?