Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆறில் ஒன்றாக பாலிவுட்டில் அறிமுகமாகும் பார்வதி
தனது 'ஸ்டார் இமேஜை' பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது பாலிவுட் அறிமுகப்படத்தில் ஆறு ஹீரோயின்களில் ஒருவராக களமிறங்குகிறார்.
ஹீரோவே இல்லாத இந்த படத்தை விஷால் ஆர்யன் சிங் இயங்குகிறார்.
இது குறித்து பார்வதி கூறுகையில்,
மனம் சொல்வதை கேட்க கூடியவள் நான். கவர்ச்சிகரமான உலகின் ஒரு பகுதியாகவே நான் வாழ விரும்புகிறேன். அழகு ராணியாக இருப்பதே எனக்கு பிடிக்கும். அதனால் தான் அழகி போட்டிகளில் பங்கேற்றேன். அழகி போட்டிகள் இல்லாவிட்டால் நான் என்னவாகியிருப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை.
உலக அழகி போட்டிக்கு தேர்வான சமயத்திலிருந்தே பல படங்களில் நடிக்க அழைத்தார்கள். ஆனால், எனக்கு கதை பிடிக்கவில்லை. ஆனால், இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.
இந்த படத்தில் வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் வாழும் ஆறு பெண்கள் எப்படி ஒரே இடத்தில் சந்திக்கின்றனர். அவர்களை சுற்றி இந்த படம் செல்கிறது.
என்ன செய்தாலும் செய்தியாகிவிடுகிறது...
படப்பிடிப்பின்போது தெரியாமல் அந்த பக்கமாக சென்ற ஒருவர் மீது என் கால் பட்டுவிட்டது. அது ஒரு விபத்து தான். ஆனால், மக்கள் நான் யாரையோ அடித்து உதைத்து விட்டதாக பேசி கொள்கின்றனர். பிரபலங்களுக்கு கிடைக்கும் பரிசுகளில் இதுவும் ஒன்று. அவர்கள் என்ன செய்தாலும் அது செய்தியாகி விடுகிறது.
எனது பெற்றோர்கள் என்னிடம் உனக்கு ஆதரவாக 100 பேர் கருத்து தெரிவித்தால், எதிர்த்து விமர்சிப்பவர்கள் 200 பேர் இருப்பார்கள் என அறிவுரை வழங்கியுள்ளனர். அதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.
எனக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கையுள்ளது. நான் விரும்பும் போதெல்லாம் கடவுளுடன் பேசுவேன். அந்த பேச்சு எனக்கு அமைதி தேடி தரும். ஆனால், சாதி மற்றும் மதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. என்னை பொறுத்தவரை நமக்கு மேலிருந்து நம்மை காப்பவர் தான் கடவுள்.
உலக அழகி போட்டியில் முதலிடத்தை ரஷ்ய அழகியிடம் பறிகொடுத்தது பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால், நூலிழையில் பட்டம் போனது சிறிது கடினமாக தான் இருந்தது. இருந்தாலும் கடவுள் எனக்கு என்று தனியாக எதாவது வைத்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
மகுடம் சூட்டி கொள்வது மட்டும் தான் வெற்றி பெற்றதற்கு அர்த்தமாகாது. மக்களின் மனங்களில் இடம்பிடித்தாலே போதும் என்றார்.