Don't Miss!
- Sports என்ன டா இப்படி ஏமாத்துறீங்க? இது எப்படி அவுட்டாகும்? நடுவரின் தவறான முடிவு.. கடுப்பான விராட் கோலி
- News தேர்தலுக்கு பிறகு மொத்தமாக சென்னை திரும்பும் பொதுமக்கள்.. திணறும் பரனூர்! அப்போ பெருங்களத்தூர் நிலை?
- Technology புது விதிகள்.. பேங்க் அக்கவுண்ட்.. கஸ்டமர்களுக்கு ரூ.325 கட்டணம்.. உங்க அக்கவுண்ட்டில் எடுக்கப்பட காரணம்?
- Lifestyle உங்க உதடுகள் கொஞ்சம் கொஞ்சமா கருப்பா மாறுதா? அப்ப இந்த பிரச்சினைகளில் ஒன்று உங்களுக்கு இருக்காம்...!
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Automobiles ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ரம்பா – இந்திரன் கல்யாணம் விமரிசையாக முடிந்த்து
இன்று பிற்பகல் 12.50 மணிக்குத் திருமணம் நடந்த்து. அலங்காரத்துடன் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார் ரம்பா. பின்னர் மணமகள் சடங்கு நடந்த்து. அதன் பின்னர் மணமகன் இந்திரன் அழைத்து வரப்பட்டார்.
இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி திரைப்படத்துறையினர் மற்றும் சின்னத்திரை நடிகர்- நடிகைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று காலை நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மாலை அவருக்கு பெண்ணழைப்பு சடங்குகள் நடந்தன.
திருமணத்தில் டான்ஸ் மாஸ்டர் கலா, நடிகை ரோஜா, அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமணத்துக்கு வந்தவர்களுக்கு காலையில் 15 வகை சிற்றுண்டிகளும், பிற்பகல் 35 வகையான அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.
திருமணத்தையொட்டி பலத்த பாதுகாப்புக்கும் ரம்பா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருமணம் முடிந்ததைத் தொடர்ந்து வருகிற 11ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்த் திரையுலகினர் திரளாக கலந்து கொள்ளவுள்ளனர்.