twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சசிகுமார் - சமுத்திரக்கனி இணையும் போராளி

    By Shankar
    |

    நாடோடிகள் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு, சசிகுமார் நடிக்க சமுத்திரக்கனி இயக்கும் படத்துக்கு போராளி என தலைப்பிட்டுள்ளனர்.

    சசிகுமார் இயக்கிய முதல் படமான சுப்பிரமணியபுரம் படத்தில் சமுத்திரக் கனி முக்கிய வேடத்தில் நடித்தார். அடுத்து நாடோடிகள் படத்தை சமுத்திரக் கனி இயக்க சசிகுமார் நடித்தார்.

    அடுத்த படமான ஈஸனில், சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்க சசிகுமார் இயக்கினார்.

    இப்போது சமுத்திரக்கனியின் முறை. இவர் அடுத்து போராளி என்ற படத்தை இயக்குகிறார். இதில் சசிக்குமார் நடிக்கிறார். போராளி படபிடிப்பு சென்னையில நடக்க உள்ளது.

    சமுகத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனின் பிரச்சினைகளை அடிப்படையாக் கொண்டது இந்தப் படம். இதில் சசிக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    இப்படத்தை சசிக்குமாரே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் படத்தில் இடம்பெற்றிருந்த தொழில்நுட்ப கலைஞர்களே இப்படத்திலும் பணியாற்றுகிறார்கள்.

    வருகிற ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 80 நாட்களில் படபிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    English summary
    After the box office block buster Nododigal, Director Sasikumar and Samuthirakkani join hands once again for a new venture Porali soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X