Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரஜினி மகள் திருமணம்: சோனியா வருகிறார்
செளந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த கட்டுமானத் துறையில் இருக்கும் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன.
திருமணத்திற்காக ராணி மெய்யம்மை மண்டபம் மற்றும் ராஜா முத்தையா மண்டபம் ஆகியவை புக் செய்யப்பட்டுள்ளன.
விரைவில் திருமணப் பத்திரிக்கையைக் கொடுக்கும் வேலையில் ரஜினி தம்பதிகள் இறங்கவுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் திருமணத்திற்கு அழைக்க முடிவாகியுள்ளதாம.
அதேபோல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவும் திருமணத்திற்கு வருகிறாராம். இதுதவிர மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என நாட்டின் பல முன்னணிப் பிரபலங்கள் கல்யாணத்திற்கு வரவுள்ளனர்.
நடிகர் அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் குடும்ப சகிதமாக கலந்து கொள்கிறார்.
திருமண நிச்சயதார்த்தத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மனைவியுடன் நேரில் சென்று அழைத்திருந்தார் ரஜினி. ஆனால் ஜெயலலிதா வரவில்லை. திருமணத்திற்கு அவர் வரலாம் என்று தெரிகிறது.
திருமணத்திற்குப் பிறகு செளந்தர்யா, தனது கணவருடன் தனிக்குடித்தனம் போகவுள்ளார். இதற்காக சேத்துப்பட்டில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு தயாராகி விட்டது.