Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பையா படம் வெளியாகத் தடை!
வருகிற பொங்கலுக்கு கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பையா படம் இரண்டும் ஒரே நேர்த்தில் வெளியாகவிருந்தன. இதனால் விநியோகஸ்தர்கள் அதிருப்திக்குள்ளானார்கள்.
ஒரே நேரத்தில் இரண்டு படங்களும் வந்தால் வியாபாரம் பாதிக்கும் என்று தெரிவித்தனர். கார்த்தியும் இதை விரும்பவில்லை.
ஆயிரத்தில் ஒருவன் படத் தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறும்போது, 'பருத்திவீரன் படம் ரிலீசான உடனேயே ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனவே இந்த படத்துக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்றார்.
பையா பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்குசாமியோ, 'தனது பையா படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதால் உடனே வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்படும்' என்றார்.
இந்நிலையில் இந்த விஷயத்தில் தலையிட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பையா படத்தை தள்ளி வைக்குமாறும், பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே ரிலீசாக வேண்டும் என்றும் கூறிவிட்டது.