Don't Miss!
- Sports நீ தான் தம்பி சிஷ்யன்.. பவுலிங் செய்வதற்கு முன் தோனி காலில் விழுந்த பதிரனா.. தல ரியாக்சன் பாருங்க!
- News தமிழகம், புதுவையில் 40 தொகுதியிலும் போட்டியிடும் திமுக, கூட்டணி வேட்பாளர்கள் யார்? முழு விவரம்!
- Technology அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ரூ.14,999 போதும்.. 108MP கேமரா.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?
- Finance வாரன் பஃபெட்- நானும் படுக்கமாட்டேன், தள்ளியும் படுக்கமாட்டேன்..! சம்பளம், ஈவுத்தொகைக்கு பெரிய 'நோ'
- Automobiles ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- Lifestyle Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நாளை டிவி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்
இது குறித்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை, பொதுச் செயலாளர் வசந்த், செயலாளர் சிவன் சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணா விரதப்போராட்டம் நடைபெறும். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
அனைத்து டிவி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள் மற்றும் டிவியில் பணிபுரியும் அனைத்து கலைஞர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இத்துடன் சின்னத் திரையில் பணிபுரியும் கலைஞர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதல்வர் அறிவித்துள்ள இலங்கை தமிழர் நிவாரண நிதி பெயரில் காசோலையாக வழங்க வேண்டும்.
சின்னத்திரை நடிகர் சங்கம், எழுத்தாளர் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்தப் போராட்டத்தை பாஜக எம்.பி. திருநாவுக்கரசர் துவக்கி வைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.