தியேட்டர் உரிமையாளர் மகனை மணக்கும் அபர்ணா-நிச்சயதார்த்தம் நடந்தது

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அபர்ணா. கண்ணுக்குள்ளே உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
பரதநாட்டியக் கலைஞரான அபர்ணாவுக்கும், சென்னை பூந்தமல்லி சுந்தர் தியேட்டர் உரிமையாளர் கண்ணப்பனின் மகன் டாக்டர் பரணிக்கும் திருமணம் முடிவானது.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று இரவு தி.நகரில் நடந்தது. இதில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இவர்களின் திருமணம் ஜூன் 29ம் தேதி வானகரம், ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications