கிரிஷின் 'அனுஷ்கா பாசம்'!
'வானம்' படத்தைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிப் படம் ஒன்றை இயக்குகிறார் கிரிஷ்.
யார் இந்த கிரிஷ்... ஜகர்லமுடி சாய்பாபா. ஆந்திர மக்கள் அறிந்த தயாரிப்பாளர். இவரின் மகன்தான் ராதாகிருஷ்ணன் என்கிற கிரிஷ்.
இவரின் முதல் தெலுங்குப் படமான 'கம்யம்' (தமிழில் 'காதல்னா சும்மா இல்ல') பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்ததுடன் நில்லாமல் ஏகப்பட்ட விருதுகளையும் அள்ளி வந்தது.
அதைத்தொடர்ந்து வந்த இவரின் 'வேதம்' தெலுங்கில் சமீப நாட்களில் வந்த முதல் மல்ட்டி ஸ்டாரர் படம் என்றே சொல்லலாம். அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடித்து புதுமையான திரைக்கதையில் வந்த இப்படம் மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தது. இதை 'வானம்' என்ற பெயரில் தமிழ்படுத்தியவர் சிம்பு. தமிழிலும் கிரிஷ்தான் இயக்குனர் என்பது அறிந்ததே.
தன் தோழி அனுஷ்காவை விலைமாது பெண்ணாக நடிக்க வைத்து தமிழில் அவருக்கு புது அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். 'வானம்' ரெஸ்பான்ஸை தொடர்ந்து ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் படம் பண்ணும் பரபரப்பில் உள்ளார் கிரிஷ். கதையை கேட்காமலேயே அனுஷ்கா கால்ஷீட்டை அள்ளித்தர, இருமாநில மக்களும் அறிந்த ஹீரோவை தேடி வருகிறார்.
சூர்யா, கார்த்தி, சிம்பு ஆகிய மூவரும்தான் கிரிஷின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளவர்கள். மூவரிடமும் அனுஷ்கா மூலம் மூவ் செய்து வருகிறார். அனுஷ்காவின் அளவில்லாத பாசம் குறித்து கேட்டால், 'அது அப்படித்தாங்க' என்று நழுவுகிறார் கிரிஷ்.
ஏதோ நல்லா இருந்தா சரி!


Click it and Unblock the Notifications











