கமல்... சர்ச்சை கிளப்பிய விஜய் வசனம்!

இந்தப் படத்தில் வரும் ஒரு வசனம் பெரும் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் அடுத்த படம் குறித்து கதாநாயகி கேட்பது போல வரும். இதற்கு பதிலளிக்கும் பா விஜய், 'ரஜினி இப்போது எந்திரன் படத்தில் நடிக்கிறார் என்றும், அடுத்த ஆண்டு படம் ரிலீஸாகும்' என்றும் கூறுவார்.
அடுத்தாக கதாநாயகி இப்படிக் கேட்பார்:
கமல் எப்படியிருக்கார்… கன்னமெல்லாம் இன்னும் கொழுக் மொழுக்குன்னு அப்படியே இருக்கா?
பா விஜய்: இப்போ அவரை விட பெரிய பெரிய நடிகர்களெல்லாம் வந்தாச்சு தமிழ் சினிமால…!!
கதாநாயகி இன்னும் அந்தக் கால நினைவுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அது சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
படத்துக்கு கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி தயாரித்துள்ளவர் பா.விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











