Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சிங்கம் சீக்கிரம் வருவதன் பின்னணி!
இதுவே ரஜினி படமாக இருந்தால், இந்நேரம் கொடி பிடித்து கோஷம் போட்டு உண்ணாவிரதம் இருந்து ஊரைக் கூட்டியிருப்பார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும். அவரும் பணத்தை திருப்பிக் கொடுத்து அனுப்பியிருப்பார்.
ஆனால் சன் பிக்சர்ஸ் படம்... பகைத்துக் கொள்ள முடியாதே... அதனால் பவ்யமாக நிலைமையை எடுத்துச் சொன்னார்களாம். பல திரையரங்குகளில் இந்த வாரத்தோடு சுறாவை தூக்கிவிட்டு வேறுபடம் திரையிடும் முடிவைச் சொல்ல, 'கொஞ்சம் பொறுங்கள்.. சிங்கம் படத்தைத் தருகிறோம்' என்று கூறியுள்ளது சன் பிக்சர்ஸ்.
திட்டமிட்டதற்கு ஒரு வாரம் முன்பாக அதாவது மே 28-ம் தேதியே சிங்கத்தை ரிலீஸ் செய்வதன் பின்னணி இதுதான் என்கிறது விநியோகஸ்தர் தரப்பு. அதே நேரம், 'சிங்கம் படத்தை ரிலீஸ் செய்வது ஓகே... ஆனால் இன்னும் ஒரு வாரம் முன்கூட்டி ரிலீஸ் பண்ணால், எங்கள் நஷ்டத்தின் அளவாவது குறையுமே!' என்று அங்கலாய்க்கிறார்கள்.
ஆனால் விஜய்யோ, இந்த உண்மை எதையும் கவனத்தில் கொள்ளாமல், 'விமர்சனம் பத்திக் கவலையில்ல... என் படம் பிரமாதமா போகிறதாக்கும்' என்று ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்!