Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெருகும் குடிகாரர்கள்-சிவகுமார் வேதனை
திருப்பூரில், ஆழியாறு திருக்கோயில் நிறுவனர் வேதாத்ரி மகரிஷியின் மனைவி லோகாம்பாளின் 94 வது பிறந்த நாள், மனைவி நல வேட்பு நாளாக மனவளக்கலை மன்றத்தில் நடத்தப்பட்டது.
இதில் 1008 தம்பதிகள் கலந்து கொண்டு மாலை மாற்றிக் கொண்டு ஒற்றுமையாக வாழ உறுதி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் தனது மனைவி லட்சுமியுடன் கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது:
பெண் என்பவள் சிறுமியாக இருக்கும் போது பெற்றோர் பாதுகாப்பில் வாழ்கிறாள். திருமணத்திற்கு பின்பு கணவன் பாதுகாப்பில் வாழ்கிறார். இதனால் பெண்கள் கூண்டு கிளியாகவே வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.
பெண்களே ஆண்களை இறுதி வரை போற்றி பாதுகாக்கின்றனர். நான் தனிமையை விரும்புவன். எனது உடலும் உயிரும்தான் நண்பர்கள்.
நான் அசைவம் சாப்பிடுவதை 1988 ம் ஆண்டு முதல் நிறுத்திவிட்டேன். காரணம், உயிர் கொலை கூடாது என்பது என் கருத்து. அதைப்போல எனக்கு மதுப் பழக்கமும், புகைப் பிடிக்கும் பழக்கமும் எப்போதும் கிடையாது.
கஜனா நிரம்ப வேண்டும் என்பதற்காக குடி மக்களை குடிகார மக்களாக்கிவிட்டது அரசு. தாய், மனைவி, மகள் மீது ஆணையாக நான் மது குடிக்கமாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெற்ற தாய், கட்டிய மனைவி ஆகியோரை நாம் தெய்வமாக போற்றி பாதுகாக்க வேண்டும். பணமும் புகழும் நிரந்தரம் அல்ல. போகும்போது எதையும் எடுத்துச் செல்ல முடியாது.
உழைத்து சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்றார் சிவக்குமார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள், ஆன்மீக அன்பர்கள், மனவளக்கலை மன்றத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்