Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'காவலர் குடியிருப்பு'.. ஒரு நிஜ சினிமா!
1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, பெங்களூரில் நடந்த பெரிய கலவரத்தை மையமாக வைத்து போலீஸ் குவார்ட்டர்ஸ் எனும் படத்தில் கன்னடத்தில் இயக்குகிறார் ஏஎம்ஆர் ரமேஷ். இந்தப் படம்தான் தமிழில் காவலர் குடியிருப்பு என்ற பெயரில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார்.
விழாவில் அவர் பேசியது:
"தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்களை படமாக்க இங்கே யாரும் முன்வராத நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த ஏ.எம்.ஆர்.ரமேஷ்தான் அதை வைத்து சயனைடு (குப்பி) என்ற படத்தைத் தந்தார்.
இப்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்த கலவரத்தை மையமாக வைத்து, 'காவலர் குடியிருப்பு' படத்தை இயக்கி இருக்கிறார். உண்மை சம்பவங்களை படமாக்க ஒரு சிலர் மட்டும்தான் இருக்கிறார்கள். அதில், ஏ.எம்.ஆர்.ரமேசும் ஒருவர்.
தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், 2 மாநிலங்களையும் இணைப்பது சினிமா மட்டும்தான். 2 மாநில மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பது சினிமாதான்...", என்றார் அமீர்.
பின்னர் பேசிய படத்தின் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ், "நாட்டில் நடக்கும் கலவரங்கள் பல குடும்பங்களை சிதைத்துவிடுகின்றன. பல உயிர்களை பலிகொண்டுள்ளன. பலரை சிறைக்கு அனுப்பியிருக்கின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இவை அத்தனையும் பெங்களூரில் நடந்தது. இந்த கலவரத்தில் ஒருவர் 17 வருடங்களாக காணாமல் போனார். நிஜ சம்பவம் நிகழ்ந்த காவலர் குடியிருப்பிலேயே ஒரு மாதம் தங்கி படப்பிடிப்பு நடத்தினோம். நிஜ சம்பவங்களை பார்த்த பொதுமக்கள், அதை சினிமாவாகப் படமாக்கியபோது, கலவர காட்சிகளை கண்ணீருடன் பார்த்தார்கள்..." என்றார்.