Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குத்தாட்டம் போட தீபிகாவா, கத்ரீனாவா? குழப்பத்தில் ஆமிர் கான்
மும்பை: இம்ரான் கானை வைத்து தான் எடுக்கும் டெல்லி பெல்லி படத்தில் குத்துப்பாட்டுக்கு தீபிகாவை எடுக்கலாமா அல்லது கத்ரீனாவை கேட்கலாமா என்று ஆமிர் கான் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டு இல்லாமல் படங்கள் வருவதில்லை. முன்பெல்லாம் குத்துப் பாட்டுக்கு ஆட தனியாக கவர்ச்சி நடிகைகள் இருந்தனர். தற்போது கதாநாயகிகளே நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு குத்தாட்டம் போடுகின்றனர். அதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
தீஸ் மார் கான் படத்தில் கத்ரீனாவும், தம் மாரோ தம்மில் படுகவர்ச்சியாக தீபிகாவும் ஆடியுள்ளனர். இந்நிலையில் குத்துப்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்த ஆமிர் தான் தயாரிக்கும் டெல்லி பெல்லி படத்தில் ஒரு குத்துப்பாடல் வைக்கவுள்ளார். இதில் ஆட தீபிகா, கத்ரீனா கைப் மற்றும் மல்லிகா ஷெராவத் பெயர்கள் அடிபடுகிறது.
எங்கு பார்த்தாலும் ரன்பிர் கபூரின் முன்னாள் காதலிகளான தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் தான் போட்டியாக இருக்கிறது. பார்க்கலாம் ஆமிர் யாரைத் தான் தேர்வு செய்கிறார் என்று.