Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தொடங்கியது பொக்கிஷம் ஷூட்டிங்
சேரன் இயக்கி வெளிவந்த ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் இது. பத்மப்ரியா, உதயதாரா நாயகிகளாக நடிக்கின்றனர். இன்னும் இரு நாயகிகளும் நடிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
திருமணத்துக்குப் பிந்தைய இனிய மலரும் நினைவுகளின் தொகுப்பாக இந்தப் படத்தை உருவாக்குகிறார் சேரன். படத்தின் தலைப்பே- 'பொக்கிஷம், நீ எனக்கு எழுதிய காதல் கடிதங்கள்'- பாதிக் கதையைச் சொல்லிவிடுவது போல் கவிதையாய் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் நான் அவனில்லை, அஞ்சாதே வெற்றிப் படங்களைத் தயாரித்த நேமிச்சந்த் ஜெபக்-ஹித்தேஷ் ஹபக். ஆனால் இம்முறை இவர்கள் நேரடியாக தயாரிப்பில் ஈடுபடவில்லை. முதல் பிரதி அடிப்படையில் சேரன் இயக்கித் தருவதால், பட்ஜெட் தொகையை முழுவதுமாக அவரிடமே ஒப்படைத்துவிட்டார்கள் (இதில் ஒரு பகுதிதான் நேற்று வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளானது).
இந்தப் படத்துக்காக ஆட்டோகிராபில் நடித்த கோபிகா, ஸ்னேகா ஆகிய நடிகைகளை எவ்வளவோ கேட்டும் அவர்கள் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டனர்.
அதனால் தனது ஆஸ்தான நாயகியான பத்மப்பிரியா மற்றும் கண்ணும் கண்ணும் நாயகி உதயதாராவிடம் போய்விட்டார் சேரன்.
என்ன செய்வது, இந்த பச்சைத் தமிழனுக்கு அவ்வப்போது மலையாளம்தான் கைகொடுக்கிறது!