Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொழும்பு விழாவுக்கு ராவணன் போகலை!-மணிரத்னம்
தனித்து வாழும் பெண்கள் தொடர்பாக 'நாம்' என்ற அமைப்பின் நிகழ்ச்சியில் மனைவி சுஹாஸினியுடன் பங்கேற்ற மணிரத்னம் பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "ராவணன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடந்து கொண்டுள்ளன. இன்னும் படம் முடியவில்லை. எனவே கொழும்பு விழாவில் பங்கேற்பது குறித்த கேள்வியே அவசியமற்றது.
நான் பங்கேற்கவில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன். ஆனால் மற்றவர்கள் பங்கேற்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை", என்றார்.
"ஐஸ்வர்யா ராய் உங்கள் படத்தின் நாயகிதானே.. அவர் பங்கேற்கிறாரா... அவர் பங்கேற்பார் என்று செய்திகள் வெளிவந்துள்ளனவே?" என நிருபர்கள் கேட்டனர்.
உடனே மணிரத்னம், "ஐஸ்வர்யா ராயை நான் கட்டுப்படுத்த முடியாது. பங்கேற்பதும் பங்கேற்காமல் இருப்பதும் அவர் விருப்பம்", என்றார்.