Don't Miss!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கொழும்பு விழாவுக்கு ராவணன் போகலை!-மணிரத்னம்
தனித்து வாழும் பெண்கள் தொடர்பாக 'நாம்' என்ற அமைப்பின் நிகழ்ச்சியில் மனைவி சுஹாஸினியுடன் பங்கேற்ற மணிரத்னம் பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "ராவணன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடந்து கொண்டுள்ளன. இன்னும் படம் முடியவில்லை. எனவே கொழும்பு விழாவில் பங்கேற்பது குறித்த கேள்வியே அவசியமற்றது.
நான் பங்கேற்கவில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன். ஆனால் மற்றவர்கள் பங்கேற்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை", என்றார்.
"ஐஸ்வர்யா ராய் உங்கள் படத்தின் நாயகிதானே.. அவர் பங்கேற்கிறாரா... அவர் பங்கேற்பார் என்று செய்திகள் வெளிவந்துள்ளனவே?" என நிருபர்கள் கேட்டனர்.
உடனே மணிரத்னம், "ஐஸ்வர்யா ராயை நான் கட்டுப்படுத்த முடியாது. பங்கேற்பதும் பங்கேற்காமல் இருப்பதும் அவர் விருப்பம்", என்றார்.