Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'குதிரை' ரமணா!
விஜய்யின் முதல் ஆக்ஷன் படம் திருமலை. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய்யின் ரேஞ்சே மாறிப் போய் விட்டது. அந்த மாற்றத்தைக் கொடுத்தவர்தான் ரமணா. அப்படத்திற்குப் பின்னர் சுள்ளான், ஆதி என ஆக்ஷன் படங்களாகவே கொடுத்துக் கொண்டிருந்த ரமணா இயக்கத்திற்கு பிரேக் விட்டு விட்டு ஹீரோவாகி விட்டார்.
ரமணாவின் உதவியாளரான ரா.ராஜசேகர்தான் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு குதிரை என பெயரிட்டுள்ளனர். முதலில் வேறு ஹீரோவைத்தான் தேடி வந்தார் ராஜசேசகர். ஆனால் யாரும் சிக்கவில்லை.
இதையடுத்து சிஷ்யரின் நிலையை உணர்ந்த ரமணா, தானே ஹீரோவாகி விட முடிவெடுத்தார். இப்படித்தான் குதிரை நாயகனானார் ரமணா.
இது வழக்கமான கதையாக இல்லாமல், சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்கிறார் ரமணா. படத்தின் நாயகனான சூர்யா கேரக்டரை மூன்று விதமான கோணங்களில் காட்டுகிறோம்.
3 நிமிடங்கள் 15 விநாடிகள் வரும் ஹீரோவின் பல்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு காட்சியை ஒரே டேக்கில் எடுத்துள்ளோம் என்கிறார் ரா.ராஜசேகர்.
சிஷ்யர் குறித்து ரமணா கூறுகையில், நான் கமர்ஷியல் படங்கள் செய்து கொண்டிருந்தபோது எனக்கு பெரும் உதவியாக இருந்தார் ராஜசேகர். ஆனால் அவருக்குள் இப்படி ஒரு திறமை ஒளிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியாது.
பல காட்சிகளில் சில ஆலோசனைகளைக் கூறலாம் என நான் நினைத்ததுண்டு. ஆனால் அதை அப்படியே மறைத்துக் கொண்டு நடிகராக மட்டும் இப்படத்தில் பங்காற்றி வருகிறேன் என்கிறார் ரமணா.
படத்தின் பல காட்சிகளை ஷூட் செய்து முடித்து விட்டனராம். இன்னும் ஒரு பாடல் காட்சி பாக்கி இருக்கிறதாம். ராஜஸ்தானில் போய் விரைவில் சுடவுள்ளனர்.
படத்தில் ரமணாவுடன், பிரகாஷ் ராஜ், வினீத், இளவரசு, லலிதா ஆகியோரும் உள்ளனராம்.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!