Don't Miss!
- Lifestyle திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- News ஆதி முதல் அந்தம் வரை.. உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும்? மேஷ ராசியின் வாழ்நாள் ராசி பலன்
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் பெரியாராக சத்யராஜ்!
-அட, நாம் வந்திருப்பது மோகன் படப்பிடிப்புத் தளமா அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்ட மேடையா...? என்ற சந்தேகத்துடன் திரும்பினால், மொட்டைத் தலையுடன் தந்தைப் பெரியார்... இல்லையில்லை, அந்த வேடத்தில் சத்யராஜ்.
மீண்டும் பெரியாராக நடிக்கிறாரா சத்யராஜ்?
ஆம்... தங்கர் பச்சான் தனது கனவுப் படமாக உருவாக்கிவரும் களவாடிய பொழுதுகள் படத்தின் முக்கியப் பாத்திரமாக பெரியாரும் வருகிறார். மேலே நீங்கள் படித்த கம்யூனிஸ்ட் கட்சி மேடையும் வருகிறது.
பெரியாராக யாரை நடிக்கச் சொல்வது என யோசித்தபோது, தனது ஒன்பது ரூபாய் நேட்டு நாயகனும், ஏற்கெனவே பெரியாராக திரையில் வாழ்ந்து காட்டியவருமான சத்யராஜ் நினைவுக்கு வந்தாராம்.
போய் கேட்டவுடன் ஒப்புக் கொண்டாராம் சத்யராஜ்.
இந்தக் கேரக்டருக்காக மொட்டை போடச் சொன்னாராம். கஷ்டப்பட்டு மொட்டையடிக்கும் அளவு அங்கு ஒன்றும் இல்லாததால், உடனே ஒப்புக் கொண்டு மொட்டைப் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.
தலைவர் ஜீவா பாத்திரத்துக்கு வேறு ஒருவரை நடிக்க வைத்து விட்ட தங்கர், என் வரதராஜன் பாத்திரத்தில் அவரையே தோன்ற வைத்தால் என்ன என யோசித்து அனுமதி கேட்டாராம். மறுப்பேதும் சொல்லாமல் மகிழ்ச்சியுடன் நடித்துக் கொடுத்துள்ளார் தோழர். ஆக மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் என் வரதராஜன் தங்கர் படத்தில் நடித்தேவிட்டார்!
பிரபுதேவா - பூமிகா சாவ்லா நடிக்கும் இந்தப் படத்தை ஐங்கரன் தயாரிக்கிறது. பரத்வாஜ் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தில் நடித்த பிறகு சத்யராஜ் ஒரு முக்கிய முடிவை எடுத்துவிட்டாராம். இனி கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பது என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்காமல், நல்ல குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கப் போகிறாராம்.
மிக நல்ல முடிவு!