Don't Miss!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் பெரியாராக சத்யராஜ்!
-அட, நாம் வந்திருப்பது மோகன் படப்பிடிப்புத் தளமா அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்ட மேடையா...? என்ற சந்தேகத்துடன் திரும்பினால், மொட்டைத் தலையுடன் தந்தைப் பெரியார்... இல்லையில்லை, அந்த வேடத்தில் சத்யராஜ்.
மீண்டும் பெரியாராக நடிக்கிறாரா சத்யராஜ்?
ஆம்... தங்கர் பச்சான் தனது கனவுப் படமாக உருவாக்கிவரும் களவாடிய பொழுதுகள் படத்தின் முக்கியப் பாத்திரமாக பெரியாரும் வருகிறார். மேலே நீங்கள் படித்த கம்யூனிஸ்ட் கட்சி மேடையும் வருகிறது.
பெரியாராக யாரை நடிக்கச் சொல்வது என யோசித்தபோது, தனது ஒன்பது ரூபாய் நேட்டு நாயகனும், ஏற்கெனவே பெரியாராக திரையில் வாழ்ந்து காட்டியவருமான சத்யராஜ் நினைவுக்கு வந்தாராம்.
போய் கேட்டவுடன் ஒப்புக் கொண்டாராம் சத்யராஜ்.
இந்தக் கேரக்டருக்காக மொட்டை போடச் சொன்னாராம். கஷ்டப்பட்டு மொட்டையடிக்கும் அளவு அங்கு ஒன்றும் இல்லாததால், உடனே ஒப்புக் கொண்டு மொட்டைப் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.
தலைவர் ஜீவா பாத்திரத்துக்கு வேறு ஒருவரை நடிக்க வைத்து விட்ட தங்கர், என் வரதராஜன் பாத்திரத்தில் அவரையே தோன்ற வைத்தால் என்ன என யோசித்து அனுமதி கேட்டாராம். மறுப்பேதும் சொல்லாமல் மகிழ்ச்சியுடன் நடித்துக் கொடுத்துள்ளார் தோழர். ஆக மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் என் வரதராஜன் தங்கர் படத்தில் நடித்தேவிட்டார்!
பிரபுதேவா - பூமிகா சாவ்லா நடிக்கும் இந்தப் படத்தை ஐங்கரன் தயாரிக்கிறது. பரத்வாஜ் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தில் நடித்த பிறகு சத்யராஜ் ஒரு முக்கிய முடிவை எடுத்துவிட்டாராம். இனி கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பது என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்காமல், நல்ல குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கப் போகிறாராம்.
மிக நல்ல முடிவு!