Don't Miss!
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அங்காடித் தெரு -அமைதிக் கொண்டாட்டம்!
சமீப காலத்தில் வந்த விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில திரைப்படங்களில் அங்காடித் தெருவுக்கு முதலிடம் கொடுக்கலாம். இயல்பான கதையோட்டம், சுரீர் என இதயத்தை தொடும் நிஜங்கள், தத்ரூபமான காட்சியமைப்புகள், அழகான கதாபாத்திரங்கள் என நெஞ்சைத் தொடும் வகையில் வந்த படைப்பு அங்காடித் தெரு.
வசந்த பாலன் இயக்கத்தில் உருவான இப்படம் 100 நாட்களைத் தாண்டியுள்ளது. இதையடுத்து படத்தை தயாரித்த ஐங்கரன் நிறுவனம் அமைதியான முறையில் 100 வது நாளை கொண்டாடியது. அதுவும் சென்னையில் அல்ல காஞ்சிபுரத்தில்.
அங்குள்ள ஸ்ரீநாராயணமூர்த்தி தியேட்டரில் நடந்த விழாவில் படத்தின் நாயகன் மகேஷ், நாயகி அஞ்சலி, இயக்குநர் வசந்த பாலன், தயாரிப்பாளர் அருண்பாண்டியன் என படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
அமைதியான முறையில் கொண்டாடியதில் தவறில்லை. ஆனால் நல்ல படங்களுக்கு இந்த அமைதி தேவையில்லை. சற்று ஆர்ப்பாட்டமாகவே இருந்திருக்கலாம்.