Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சிங்கள ராணுவத்தின் அராஜகத்தைச் சொல்லும் செங்கடல் படத்துக்கு சென்சார் தடை!!
ஒரு கரையில் ரத்தம் வடிக்கும் இலங்கைத் தமிழன், மறுகரையில் கண்ணீர் வடிக்கும் தமி்ழக தமிழன், இடைப்பட்ட நீர்ப்பரப்பில் மீன் பிடிக்கப் போய் உயிரை விடும் தமிழ் மீனவன்... இந்த மூன்று சமூகங்களின் துன்பங்களையும் அதற்குக் காரணமான காரணிகளையும் அடிப்படையாக வைத்து செங்கடல் திரைப்படம் தயாராகியுள்ளது.
லீனா மணிமேகலை உருவாக்கியுள்ள இந்தப் படம், விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்போடு தயாராகியுள்ளது. ஆனாலும் இந்தப் படம் புலிகள் மீதான வழக்கமான விமர்சனமாக இல்லாமல், சிங்களப் பேரினவாதம் மற்றும் அதற்கு துணை நிற்கும் சக்திகளால் தமிழர் பட்ட / படும் துயரங்களின் தொகுப்பாக வந்துள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு அனுமதி கோரி தணிக்கைக் குழுவுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த குழுவினர், உடனே அனுமதி மறுத்துவிட்டதோடு, படத்தை திரையிடவும் தடைவிதித்துள்ளனர்.
காரணம்...?
இந்த படத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரம் லட்சம் என அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து, சர்வதேச அரங்கில் போர்க்குற்றவாளியாக நிற்கும் சிங்கள அரசை விமர்சிப்பது போல வசனங்கள் உள்ளனவாம். சிங்கள இனவாதத்துக்கு தமிழக - இந்திய அரசுகள் துணை நின்றதாக வசனங்கள் சித்தரிக்கின்றனவாம்.
இதனாலேயே அனுமதி மறுப்பதாகக் கூறியுள்ளனர்!