Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மீன் சுமந்த தர்ஷனா!
பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியனின் மகன் எஸ்.பி.பி சரண் தயாரிக்கும் டம் குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையோரம் நடந்து வருகிறது. இப்படத்தை டைரக்டர் ராஜமோகன் இயக்குகிறார். கதாநாயகியாக ஆந்திராவை சேர்ந்த தர்ஷனா நடிக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் ராம் நடிக்கிறார்.
நேற்று மணப்பாடு கடற்கரையோரம் தர்ஷனா, கூடையில் மீன் சுமப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டது. படம் குறித்து டைரக்டர் ராஜ்மோகன் கூறியதாவது, என்னுடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம். நான் நாகர்கோவில் இந்து கல்லூரியில் எம்.ஏ வரலாறு படித்தேன்.
இந்த படத்தின் கதை அழுக்கான மனிதருக்குள் இருக்கும் அழகான காதலை பற்றியது. நான் தயாரிப்பாளர் எஸ்.பி சரனிடம் கதையின் பாதியை சொன்ன உடனே அவர் சம்மதம் தெரிவித்து விட்டார். அது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது என்றார்.
தர்ஷனாவுக்கு பூர்வீகம் ஆந்திராவாம். டாக்டருக்குப் படித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆந்திராவை சேர்ந்திருந்தாலும் என்னுடைய குடும்பம் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் தான் உள்ளது. நான் இப்போது எம்.பி.பி.எஸ் படித்து வருகிறேன்.
நான் மீன் சுமக்கும் காட்சி இங்கு படமாக்கப்பட்டது. இப்போது என்னுடைய உடம்பெல்லாம் வீசும் மீன் வாடை தான் என்னை உலகறியச் செய்யும் உயர்ந்த வாசம் என நான் உணர்கிறேன் என்றார்.
நன்றாகவும் பேசுகிறார் தர்ஷனா.