Don't Miss!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நவ்யாவுடன் 'சுப்ரமணியபுரம்' ஜெய்!
சென்னை 600028 படம்தான் ஜெய்யை தமிழ் ரசிகர்களுக்கு பெரிய அளவில் அடையாளம் காட்டிய படம். இப்படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகியுள்ள சுப்ரமணியபுரம், ஜெய்யை பெரிய ஹீரோக்கள் வரிசையில் சேர்க்க அஸ்திவாரம் போட்டு விட்டது.
இதையடுத்து ஜெய்யைத் தேடி வாய்ப்புகள் ஜே ஜே என ஓடி வரத் தொடங்கியுள்ளதாம். ஆனால் ஜெய் படு கவனமாக இருக்கிறார். நல்ல கதைகளாக தேடிப் பிடித்து ஒப்புக் கொண்டு வருகிறாராம். அப்படி அவர் ஒப்புக் கொண்டுள்ள படம்தான் அவள் பெயர் தமிழரசி.
இதில் நாயகி நவ்யா நாயர். கதையின் நாயகனாக வருகிறார் ஜெய். நவ்யா நாயரை மையப்படுத்திய கதை என்றாலும் கூட அவருடைய கேரக்டருடன் ஒட்டியபடியே ஜெய்யின் கேரக்டரும் பயணிக்குமாம். போட்டி போட்டு நடிக்க நல்ல வாய்ப்பு என்கிறார் ஜெய்.
மீரா கதிரவன் என்ற புதுமுக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகப் போகும் அவள் பெயர் தமிழரசி, ஜெய்க்கும் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாம்.
ஜெயிச்சுக்கிட்டே இருங்க ஜெய்!