Just In
- 3 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 4 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜெமினி கணேசனின் வாழ்க்கை திரைப்படமானது

ஜெமினியின் மகள் கமலா செல்வராஜ் இப்படத்தைத் தயாரிக்க வெங்கடேசன் இயக்கியுள்ளார். தாயன்பன் இசையமைத்துள்ளார்.
இது ஒரு டாக்குமென்டரி போலவும் இல்லாமல், அதேசமயம், பொழுதுபோக்குத் திரைப்படம் போலவும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம். 2 மணி நேரம் படம் ஓடுமாம்.
ஜெமினி குறித்த ஒரு முழுமையான வரலாற்றுப் பதிவாக இந்தப் படம் அமைந்துள்ளது என்கிறார் இயக்குநர் வெங்கடேசன்.
முதல்வர் கருணாநிதி, கமல்ஹாசன், கே.பாலசந்தர், நடிகைகள் அஞ்சலிதேவி, சரோஜாதேவி, சவுகார்ஜானகி, நடிகர்கள் நாசர், சோ, பாடகி சித்ரா, கவியரசு வைரமுத்து ஆகியோர் ஜெமினி கணேசன் பற்றி பேசியிருக்கிறார்கள்.
ஜெமினி படம் குறித்து வெங்கடேசன் கூறுகையில், ஜெமினி கணேசன் என்பவரை, காதல் மன்னன் என்கிற ஒரு சிறு வட்டத்துக்குள் வைத்து பழகிவிட்டார்கள். அவருக்குள் இருந்த வெவ்வேறு முகங்கள், உலகம் அறியாதவை.
திரையுலகில் அவருக்கு எதிரிகளே இல்லை. அவருக்கு போட்டியும் கிடையாது. எம்.ஜி.ஆர், சிவாஜி என்கிற மலைகள் இடையே நுழைந்து, மூன்றாவது மலையாக உயர்ந்தவர்.
ஜெமினி குறித்த பல தெரியாத செய்திகளை இந்தப் படத்தின் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என்கிறார்.