Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நடிக்க விரும்பும் 'மிஸ் இந்தியா' பார்வதி
சமீபத்தில் மும்பையில் நடந்த மிஸ் இந்தியா 2008 அழகிப் போட்டியில் கேரள அழகி (இருப்பு: மும்பை) பார்வதி ஓமனக்குட்டன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இந்தியாவில் லோக்கல் அழகிப் போட்டி முதல் மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் என எதில் வெற்றி பெற்றாலும் அடுத்த வேளையாக நடிக்க வந்து விடுவார்கள். ஓமனக்குட்டனும் அதற்கு விதி விலக்கில்லை. நடிக்க வாய்ப்பு வந்தால் தாராளமாக நடிப்பேன் என்று டிக்ளேர் செய்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய்தான் ஓமனக்குட்டனுக்கு முன்னோடியாம். ஐஸ்வர்யா உலக அழகிப் பட்டத்தை வென்றபோது பார்வதிக்கு ஜஸ்ட் 7 வயதுதானாம். அப்போதே நினைத்துக் கொண்டாராம், நானும் ஐஸ்வர்யா போல ஒரு நாள் உலக அழகி ஆவேன் என்று. அதற்கு முதல் படியாக உள்ளூரில் அழகிப் பட்டத்தை வென்றுள்ளார் பார்வதி.
கேரளம் பூர்வீகமாக இருந்தாலும், வளர்ப்பு எல்லாம் மும்பையில்தானாம். இங்குதான் பி.ஏ. படித்துள்ளார். சினிமா என்றால் உயிராம். ஒரு படம் விடாமல் பார்த்து விடுவாராம்.
இப்போது மிஸ் இந்தியா ஆகி விட்டதால் கண்டிப்பாக சினிமா வாய்ப்பு வரும். நல்ல கதையாக, நல்ல நடிகராக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் பார்வதி.
நடிப்பு பிளஸ் மாடலிங்கோடு சைடில் எம்.பி.ஏ படிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் ஓமனக்குட்டன்.
பார்வதிக்கு இப்போது பெரும் கவலை என்னவென்றால், முன்பு போல வெளியில் நண்பர்களுடன் சுற்ற முடியாதே என்பதுதான். முன்பெல்லாம் நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்தில், இஷ்டத்திற்கு டிரஸ் செய்து கொண்டு போவேன், வருவேன். ஆனால் இனிமேல் அது முடியாதே என்கிறார் ஏக்கமாக.
அக்டோபர் 4ம் தேதி நடைபெறவுள்ள மிஸ் வேர்ல்ட் போட்டிக்கு இப்போது பார்வதி தயாராகிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக பட்டம் வெல்வேன் என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார்.
பார்வதி வெறும் அழகி மட்டுமல்ல, சமூகக் கவலையும் உடைய பொறுப்பான பெண்ணாகவும் இருக்கிறார். பெண் அடிமைத்தனம் போக வேண்டும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒழிய வேண்டும், சமத்துவம் வர வேண்டும், பெண் சிசுக் கொலை ஒழிய வேண்டும் என்று சமூக அக்கறையுடன் பேசுகிறார்.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!