சென்னையில் எம்.ஜி.ஆர். ஸ்டூடியோ!

இப்போது அவர் தனது பெயரை எம்ஜிஆர் நம்பி என்று மாற்றிக் கொண்டு, எம். ஜி. ஆர். ஸ்டூடியோ என்ற பட புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
எம்ஜிஆர் ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாக பொறுத்திரு என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் எம்ஜிஆர் நம்பி.
அதோடு சென்னை சாலிகிராமத்தில் எம்.ஜி.ஆர். டிஜிட்டல் ஸ்டூடியோ என்ற பெயரில் அதி நவீன ஒலிப்பதிவு கூடத்தையும் திறந்திருக்கிறார்.
இந்த ஒலிப்பதிவு கூடத்தில் டப்பிங், எடிட்டிங், பாடல் ஒலிப்பதிவு போன்ற பணிகளை செய்ய முடியும். இதற்காக வெளிநாட்டிலிருந்து பல லட்சம் செலவில் அதி நவீன கருவிகளை இறக்குமதி செய்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர். டிஜிட்டல் ஸ்டூடியோவின் திறப்புவிழா நேற்று காலை சென்னையில் நடந்தது.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், ராதாரவி, சிவசக்தி பாண்டியன், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷோபா சந்திரசேகரன், எம்.எஸ்.விஸ்வநாதன் உட்பட ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











