Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஷில்பாவின் அழகு நிலையம் - திறந்து வைக்கும் ரேகா
காலம் கடந்தும் கலையாத அழகுடன் இருப்பவர் ரேகா மட்டுமே. எனவே இந்த அழகு நிலையத்தைத் திறந்து வைக்க முழுத் தகுதி படைத்தவர் அவர் மட்டுமே என்கிறார் பூரிப்புடன் ஷில்பா.
இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது பிளாக்கில் எழுதுகையில், யாரை வைத்து எனது அழகு நிலையத்தைத் திறக்கலாம் என நீண்ட நேரம் யோசித்தேன். அப்போது அழகு மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டுமே இணைந்து, நிரம்பியிருக்கும் ஒரே நடிகை ரேகாதான் என்று நான் உணர்ந்தேன்.
அவரைப் போல அழகானவரை நான் பார்த்ததில்லை. உடல் ஆரோக்கியம், பிட்னஸ் என அனைத்திலும் அவர் கொள்ளை அழகு. எனவே அவர்தான் எனது அழகு நிலையத்தைத் திறக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
அவரை அணுகி நீங்கள் தான் திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன், அவரும் ஏற்றுக் கொண்டார். நானும், அவரும் நல்ல தொடர்பில் இருக்கிறோம். என் மீது பாசத்துடன் இருப்பவர் ரேகா. எனக்கும் அவருக்கும் இடையிலான இந்த நெருங்கிய பந்தத்திற்கு இருவரும் தென்னிந்தியர்களாக இருப்பதால் இருக்கலாமோ என்னவோ என்று உருகியுள்ளார் ஷில்லா.
34 வயதாகும் ஷில்பாவின் மெடிஸ்பா அழகு நிலையத்தை 57 வயதாகும் ரேகா திறந்து வைப்பது உறுதியாகி விட்டது. தொழிலதிபர் கிரண் பாவாவுடன் இணைந்து ஷில்பா இந்த அழகு நிலையத்தை உருவாக்கியுள்ளார். மும்பையின் கெர் பகுதியில் இதைத் திறக்கிறார்கள். மேலும் கிளைகள் அமைக்கும் எண்ணமும் உண்டாம்.