Don't Miss!
- News லோக்சபா தேர்தல் 2024: பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் இவர்கள்தான்- முழு பட்டியல்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
புதிய வார்ப்புகள்... புத்தம் புதிய இசை!!
ஜெர்மனியைச் சேர்ந்த சொனாட்டான் நிறுவனமும் சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளர், இயக்குநர் லேகா ரத்னகுமாரின் லேகா ஸ்டுடியோவும் இனைந்து இப்போது சென்னையில் புதிய லேகா சொனாட்டான் இசைப் பதிவுக் கூடத்தை துவங்கியுள்ளன.
இந்த ஸ்டுடியோவில் பின்னணி இசைச் சேர்ப்பு, சிறப்பு சப்தம் சேர்ப்பு என பல பணிகள் குறைந்த செலவில் செய்து தரப்படுகின்றன.
இந்த ஸ்டுடியோவில் இசைப் பதிவு செய்யப்படும் முதல் திரைப்படம் கே.பாக்யராஜின் புதிய வார்ப்புகள். இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து முழு வீச்சில் இசைச் சேர்ப்பு நடந்து வருகிறது. பாக்யராஜூம் அவரது மகன் சாந்தனுவும் இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து லேகா ரத்னகுமார் கூறியதாவது:
ஆரம்பத்தில் சொனாட்டானின் பதிவு செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளை மட்டும் விலைக்குக் கொடுத்து வந்தோம். இப்போது, இங்கேயே முழுமையான அனைத்து வசதிகளும் கொண்ட ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளோம். இந்த ஸ்டுடியோவிலேயே ஒரு படத்துக்கு முழு பின்னணி இசையையும் சிறப்பு சப்தங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கட்டணம் குறைவுதான். பாடல்களை ஒரு இசையமைப்பாளரும், பின்னணி இசையமைப்பாளரும் கவனிக்கும் முறை இப்போது வந்துவிட்டதால், பட அதிபர்களுக்கு இந்த ஸ்டுடியோ ஒரு வரப்பிரசாதமாகும், என்றார்.
சாந்தனு பேட்டி:
இந்த பேட்டியின்போது உடனிருந்த புதிய வார்ப்புகள் நாயகன் சாந்தனு கூறியதாவது:
படம் முழுவதுமாக முடிந்துவிட்டது. சில பாடல்கள்தான் பாக்கி. இசைச் சேர்ப்புப் பணியும் முடிவடையும் கட்டத்தில் உள்ளது.
லேகா சொனாட்டான் ஸ்டுடியோவில் இசை சேர்ப்பது மிக எளிதாக உள்ளது. உண்மையில் இது ரெடிமேட் இசையல்ல. ஒவ்வொரு நாளும் புதுப்புது இசைத் தொகுப்புகள் சர்வதேச தரத்தில் வருகின்றன எங்கள் படத்துக்குத் தேவையான இசையை இங்குள்ள இசை லைப்ரரியிலிருந்து விருப்பத்துக்கேற்ப எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறோம். நேரம், பணம் எல்லாமே மிச்சம். நல்ல தரமான இசை...
இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகப் புதிய அனுபவம். சக்கர கட்டியில் நண்பர்களோடு இருந்தது போன்றஉணர்வு. ஆனால் இந்தப் படத்தில் ஒரு குருகுலத்தில் இருந்ததைப் போன்ற ஒரு அனுபவம் கிடைத்தது. இந்தப் படம் வந்த பிறகு என் தந்தை பாக்யராஜின் இன்னொரு பரிமாணம் உலகுக்குத் தெரியும் என்றார்.