களவாணி சர்குணத்துடன் இணைகிறார் சீயான் விக்ரம்?
'வாகை சூட வா' படத்தின் மூலம் திரைப்பட விமர்சகர்களின் அதீத பாராட்டைப் பெற்றவர் சற்குணம். அடுத்ததாக அவர் என்ன படம் இயக்க இருக்கிறார் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் கலைப்புலி தாணுவுக்கும், அம்மாகிரியேஷன்ஸ் சிவாவுக்கும் அடுத்தடுத்த படங்களை இயக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சர்குணம் கூறியுள்ளார். அதில் ஒன்று அதிரடி நிறைந்த ஆக்சன் கதை என்றும் மற்றொன்று மென்மையான காதல் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விக்ரம் நடிக்கிறார்?
தாணுவுக்கு ஆக்சன் படம் இயக்க உள்ளதாக கூறிய சர்குணம், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தயாராக உள்ளதாக கூறியுள்ளார். இரண்டிலுமே முன்னணி கதாநாயகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்மா கிரியேசன்ஸ் சிவாவிற்கு காதல் கதை இயக்க உள்ளதாக கூறிய அவர் இரண்டு படங்களில் எதை முதலில் இயக்க இருக்கிறேன் என்பது பற்றி பொங்கலுக்குப் பிறகு முறையான அறிவிப்பு வரும். " என்று தெரிவித்தார். இதில் எந்த படத்தில் சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications












