twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் நிர்வாணமாக வீரர்களுக்கு காட்சி தர பிசிசிஐ அனுமதிக்கவில்லை-பூனம் பாண்டே

    By Sudha
    |

    Poonam Pandey
    சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாகி விட்டது பூனம் பாண்டே விவகாரத்தில்.

    இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயார். நிர்வாணமாக காட்சி தரவும் நான் தயார் என்று அறிவித்தவர் இந்த பூனம். இந்தியாவும் உலகக் கோப்பையை வென்று விட்டது. ஆனால் பூனம் இதுவரை பூரண நிர்வாணத்திற்கு மாறவில்லை.

    இதுகுறித்து வாய் வலிக்க, கை வலிக்க இணையதளங்களிலும், பிளாக்குகளிலும் ஆர்வலர்கள் எழுதி எழுதி மாய்ந்து போய் விட்டனர்.

    ஆனால் தற்போது தான் இன்னும் நிர்வாண கோலத்திற்கு மாறாதது குறித்து விளக்கமளித்துள்ளார் பூனம்.

    உலகக் கோப்பையை இந்தியா வென்ற பின்னர் தலைமறைவான பூனம் தற்போது மீண்டும் அடிபடத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது.

    இந்தியா கோப்பையை வென்றதும் உங்களை எங்கேயுமே பார்க்க முடியவில்லை. நீங்களும் நிர்வாணமாகவில்லை. ஏன்.

    எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்தேன். தனியான ஒரு இடத்தில், வீரர்களுக்கு மட்டும் நிர்வாணமாக காட்சி அளிக்க அனுமதிக்குமாறு கோரி ஒரு கடிதம் எழுதி அதை எனது மேனேஜர் மூலம் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதை பிசிசிஐ அனுமதிக்கவில்லை, ஏற்கவில்லை. என்னால் நடு ரோட்டில் நிர்வாணமாக ஓட முடியாது. அது குற்றச் செயலாகும்.

    உண்மையில் நான் வேடிக்கைகாகத்தான் அப்படிச் சொன்னேன். ஆனால் அதை சீரியஸாக பலரும் கருத ஆரம்பித்து விட்டனர். நான் மிரட்டப்பட்டேன். எனது செல்போனைக் கூட ஆப் செய்து வைத்து விட்டேன். அடுத்து என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து விட்டனர். இதனால்தான் நான் தலைமறைவானேன். ஆனால் நான் மும்பையை விட்டு ஓடவில்லை.

    அப்படியானால் நீங்கள் பேசியது விளம்பரத்திற்காகவா...

    அப்படிச் சொல்ல முடியாது. நான் ஒரு டிவி சேனலுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன். ஒரு பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக என்னை நிர்வாணமாக போஸ் கொடுக்கக் கோரி அணுகினர். பல கோடி ரூபாய் தருவதாகவும் கூறினர். ஆனால் அப்படிச் செய்தால் அது பப்ளிசிட்டி என்பதால் அதை நான் ஏற்கவில்லை. ஆனால் இப்போது இந்த விவகாரத்தால் எனக்கு ஒரு திரைப்படமும், டிவி ஷோக்களும் கிடைத்துள்ளன.

    அது சரி, இந்த சமாச்சாரத்தால் உங்களது லவ்வர் ஓடிட்டாராமே?

    ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன், சிங்கிளாகத்தான் இறுக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை என்றார் பூனம் பாண்டே.

    English summary
    Model Poonam Pandey, who went into hiding after getting threats for her strip-for-win plan, is now back on the radar. She surfaces to give her side of the story.She said, "I feared for my life. I had even given my manager a letter to send to the BCCI to allow me to strip privately as public stripping is a crime, but they didn't allow me. I couldn't have just hit the road and got naked because people wanted to see me do that. It was supposed to be fun but it took an ugly turn. I was threatened. I switched off my cell and tried to figure out my next step and how to deal with the court case. I went underground but I didn't flee the city", said Poonam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X