Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நான் நிர்வாணமாக வீரர்களுக்கு காட்சி தர பிசிசிஐ அனுமதிக்கவில்லை-பூனம் பாண்டே
இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயார். நிர்வாணமாக காட்சி தரவும் நான் தயார் என்று அறிவித்தவர் இந்த பூனம். இந்தியாவும் உலகக் கோப்பையை வென்று விட்டது. ஆனால் பூனம் இதுவரை பூரண நிர்வாணத்திற்கு மாறவில்லை.
இதுகுறித்து வாய் வலிக்க, கை வலிக்க இணையதளங்களிலும், பிளாக்குகளிலும் ஆர்வலர்கள் எழுதி எழுதி மாய்ந்து போய் விட்டனர்.
ஆனால் தற்போது தான் இன்னும் நிர்வாண கோலத்திற்கு மாறாதது குறித்து விளக்கமளித்துள்ளார் பூனம்.
உலகக் கோப்பையை இந்தியா வென்ற பின்னர் தலைமறைவான பூனம் தற்போது மீண்டும் அடிபடத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது.
இந்தியா கோப்பையை வென்றதும் உங்களை எங்கேயுமே பார்க்க முடியவில்லை. நீங்களும் நிர்வாணமாகவில்லை. ஏன்.
எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்தேன். தனியான ஒரு இடத்தில், வீரர்களுக்கு மட்டும் நிர்வாணமாக காட்சி அளிக்க அனுமதிக்குமாறு கோரி ஒரு கடிதம் எழுதி அதை எனது மேனேஜர் மூலம் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதை பிசிசிஐ அனுமதிக்கவில்லை, ஏற்கவில்லை. என்னால் நடு ரோட்டில் நிர்வாணமாக ஓட முடியாது. அது குற்றச் செயலாகும்.
உண்மையில் நான் வேடிக்கைகாகத்தான் அப்படிச் சொன்னேன். ஆனால் அதை சீரியஸாக பலரும் கருத ஆரம்பித்து விட்டனர். நான் மிரட்டப்பட்டேன். எனது செல்போனைக் கூட ஆப் செய்து வைத்து விட்டேன். அடுத்து என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து விட்டனர். இதனால்தான் நான் தலைமறைவானேன். ஆனால் நான் மும்பையை விட்டு ஓடவில்லை.
அப்படியானால் நீங்கள் பேசியது விளம்பரத்திற்காகவா...
அப்படிச் சொல்ல முடியாது. நான் ஒரு டிவி சேனலுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளேன். ஒரு பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக என்னை நிர்வாணமாக போஸ் கொடுக்கக் கோரி அணுகினர். பல கோடி ரூபாய் தருவதாகவும் கூறினர். ஆனால் அப்படிச் செய்தால் அது பப்ளிசிட்டி என்பதால் அதை நான் ஏற்கவில்லை. ஆனால் இப்போது இந்த விவகாரத்தால் எனக்கு ஒரு திரைப்படமும், டிவி ஷோக்களும் கிடைத்துள்ளன.
அது சரி, இந்த சமாச்சாரத்தால் உங்களது லவ்வர் ஓடிட்டாராமே?
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன், சிங்கிளாகத்தான் இறுக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை என்றார் பூனம் பாண்டே.