Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சினிமா இருப்பது சுகமானதல்ல, வாய்ப்பு வந்தால் தூக்கம் வராது: நாசர்
நெய்வேலியில் நடந்த புத்தக கண்காட்சிக்கு நடிகர் நாசர் வந்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:
சினிமாவில் வாய்ப்பு தேடுவது சுலபமானதாக இருக்கலாம். ஆனால், வாய்ப்பு கிடைப்பது அறிது. அப்படி வாய்ப்பு கிடைத்து விட்டால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் போய்விடும். சினிமா துறையில் இருப்பது சுகமானதன்று.
சினிமாவில் அரும்பாடு பட்டு கிடைத்த வாய்ப்பை எப்படி தக்க வைத்து கொள்வது என்று யோசித்தால் தூக்கமே வராது. சினிமா துறையில் உள்ள அனைவரும் செல்வந்தர்கள் இல்லை. 99 சதவிகிதம் பேர் நடுத்தர, கீழ்த்தர வகுப்பினை சேர்ந்தவர்கள்.
நான் இதுவரை 1000 புத்தகங்கள் படித்துள்ளேன். அவை என் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன உலகில் மனிதன் தனக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி தனித்து வாழ்கிறான். அவ்வாறு இருக்கும் மனிதனுக்கு நட்புணர்வை ஊட்டுவது புத்தகங்கள்.
மனிதன் பொய் சொல்லலாம். ஆனால், புத்தகங்கள் உண்மையை தான் சொல்லும். நான் இந்த புத்தக கண்காட்சிக்கு நடிகராக வரவில்லை ஒரு புத்தக விரும்பியாக வந்துள்ளேன். நெய்வேலி அழகும், பசுமையும் கொண்ட நகரமாக உள்ளது என்று அவர் கூறினார்.