Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'இரண்டாவது திருமணம் செய்து கொண்ட வனிதா மகன் மீது உரிமை கோரக்கூடாது!'- ஆகாஷ் வழக்கு
நடிகை வனிதாவுக்கும், நடிகர் ஆகாஷுக்கும் 10.9.2000 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி (வயது 9), ஜோவிகா (5) ஆகிய 2 குழந்தைகள் பிறந்தனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வனிதாவும், ஆகாஷும் விவாகரத்து பெற்றனர். மகன் ஸ்ரீஹரியை யார் பராமரிப்பது என்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எனது 2 குழந்தைகளுக்காக நான் இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கிறேன். ஆனால் விவாகரத்து பெற்று 6 மாதங்களுக்குள், ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழும் ஆனந்தராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். மறு திருமணம் செய்ததால் குழந்தையை சந்திக்கும் உரிமையை அவர் இழந்துவிட்டார். நிரந்தர மாத வருமானம் இல்லாத ஆனந்தராஜன் தனது மனைவியை சட்டப்பூர்வமாக இன்னும் பிரியவில்லை. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் ஆனந்தராஜன் நடந்து கொள்கிறார்.
விஜய்ஸ்ரீஹரியை அவர் கொடுமைப்படுத்துவதற்கு வனிதா தடை சொல்வதில்லை. விஜய்ஸ்ரீஹரியை சந்தித்து பேசியபோது இதையெல்லாம் அவன் கூறினான்.
தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. என்னுடன் வசிப்பதையே விஜய்ஸ்ரீஹரி மிகவும் விரும்புகிறான். தாயார் வனிதாவுடன் வசிப்பதை விரும்பவில்லை என்பதை பத்திரிகை, டி.வி.களில் பேட்டியாக தெரிவித்துள்ளான். ஆனால் அவனை என்னிடம் இருந்து அபகரித்துக்கொள்ள வனிதா பல முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
செகந்திராபாத் குடும்பநல கோர்ட்டில் அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு தற்காலிகமானதுதான். ஏனென்றால் அப்போதைய சூழ்நிலையில் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. குழந்தையின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்றபடி வழங்கப்பட்ட தீர்ப்பு அது. என்னுடன் குழந்தை நன்றாக வசிப்பதற்கு ஏற்ற வகையில் நல்ல வருமானம் வருகிறது. எனது 2 குழந்தைகளையுமே நான் என்னுடன் வைத்து பராமரிக்க முடியும். வனிதாவும், ஆனந்தராஜனும் அவர்களுக்கு பிறந்த குழந்தையை மட்டும் நன்றாக கவனித்துக்கொள்கின்றனர். என்னுடைய குழந்தைகளை மாற்றான்தாய் மனப்போக்குடன்தான் நடத்துகின்றனர்.
எனவே கால சூழ்நிலை மாறிய நிலையில் விஜய்ஸ்ரீஹரி என்னுடன் வசிப்பதில் தலையிட வனிதாவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு 18-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி வனிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.