Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'சேவல்' பரத்துடன் இணையும் சிம்ரன்!
ஹீரோவுக்கு ஜோடி இல்லையென்றாலும், அவருக்கு கொஞ்சமும் சளைக்காத வேடமாம் இது. தாமிரபரணியில் நதியாவின் வேடம் எப்படி சஸ்பென்ஸாக வைக்கப்படிருந்ததோ அப்படித்தான் இதில் சிம்ரனின் வேடமும் என்கிறார் இயக்குநர் ஹரி.
பரத்-பூனம் பஜ்வா நடிக்கும் சேவலின் துவக்க விழா நேற்று காலை விஜயா கார்டனில் உள்ள பி.என்.நாகிரெட்டி அரங்கில் பூஜையுடன் தொடங்கியது. பிரபல விநியோகஸ்தர் எம்.ஏ.ஜின்னா தனது ஜின்னா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் முதல் படம் இது.
படம் குறித்து இயக்குனர் ஹரி கூறியதாவது: ஹீரோ பரத்துக்கு இணையாக சிம்ரனுக்கும் இதில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினாக பூனம் பஜ்வா நடிக்கிறார்.
ஒருவிதத்தில் சிம்ரனுக்கு இது ரீஎன்ட்ரி படம். அவருக்கு அக்கா, அண்ணி கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக மீடியாக்கள் கூறிவருகின்றன. ஆனால் அப்படிச் சொல்ல முடியாது. இந்தப் படத்தில் சிம்ரனின் ரோல் என்னவென்பதை சற்று சுவாரஸ்மாக இருக்கட்டுமே என ரகசியமாக வைத்திருக்கிறோம்.
படத்தின் முதல் பாதியில் பரத்- வடிவேலு கூட்டணி அதகளம் பண்ணப் போகிறது. இப்படிக்கூட செய்வார்களா என்று ரசிகர்கள் விழுந்துவிழுந்து சிரிக்கும் அளவுக்கு வடிவேலுவின் அட்டகாசம் இருக்கும். அவர் இதில் தபால்காரராக வருகிறார். இடைவேளைக்குப் பிறகு கலங்க வைக்கும் சென்டிமென்ட், அதிரடி சண்டை என இளைஞர்களின் ரசனைக்குத் தீனி போடும் வகையில் கதை போகிறது.
மற்றொரு முக்கிய அம்சம், முதல் முறையாக இந்தப் படம் முழுக்க பாத்திரங்கள் நெல்லைத் தமிழைப் பேசுவதுபோல அமைத்திருக்கிறேன். நான் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் இதுவரை எந்த படத்திலும் அந்த வட்டார வழக்கை முழுமையாகப் பயன்படுத்தியதில்லை... என்றார் உற்சாகமாக.
முன்னதாக நடந்த படபூஜையில் ஏவி.எம். சரவணன், ராம நாராயணன், கே.பாலசந்தர், பேரரசு, ஆர்.பி.சௌத்ரி, எஸ்.ஏ.சந்திரசேகர், அஜய்குமார், விஜயகுமார், மஞ்சுளா, மோனிகா, நா.முத்துக்குமார், அருண் விஜய், கஞ்சா கருப்பு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். பரத்தும், ஹரியும் கோட் சூட் கெட்டப்பில் அனைவரையும் வரவேற்றனர்.