Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரகாஷ் ராஜுடன் பரஸ்பர விவாகரத்துக்கு லலித குமாரி சம்மதம்
நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், அவரது மனைவி லலித குமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பிரகாஷ் ராஜ் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் எனக்கு பிரகாஷ் ராஜ் வேண்டும், அவரை விவாகரத்து செய்ய விரும்பவில்லை என்று உறுதியாக கூறி வந்தார் லலிதா குமாரி. இந்த நிலையில், தனது குடும்பத்தின் தினசரி செலவுக்குக் கூட பிரகாஷ் ராஜ் பணம் தர மறுக்கிறார். எனவே மாதம் ரூ. 2.58 லட்சம் ஜீவானம்சமாக தர வேண்டும் என்று கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அவர் அணுகினார்.
இந்த இரு மனுக்களும் நிலுவையில் இருந்து வந்தன. இதற்கிடையே பிரகாஷ் ராஜை சமாதானப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் இறங்கி வரவில்லை.
இந்த நிலையில் தற்போது பிரகாஷ் ராஜை விவாகரத்து செய்ய லலிதகுமாரியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதிப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
காயத்ரி ரகுராம் வழக்கு தள்ளி வைப்பு:
இந் நிலையில் விவகாரத்து கோரி நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்துள்ள வழக்கு தள்ளி வைக்கப்பட்டள்ளது.
காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ள தீபக் சந்திரசேகருக்கும், 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. காயத்ரி கணவருடனேயே அமெரிக்காவில் தங்கியிருந்தார்.
இந் நிலையில் காயத்ரி ரகுராம், கணவரை பிரிந்து சென்னை வந்து விட்டார். கடந்த 10ம் தேதி சென்னை குடும்ப நல கோர்ட்டில் தனது கணவர் தீபக் சந்திர சேகரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு முதன்மை குடும்ப நல நீதிபதி ராமலிங்கம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் சந்திரசேகரை கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.