Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரகாஷ் ராஜுடன் பரஸ்பர விவாகரத்துக்கு லலித குமாரி சம்மதம்
நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், அவரது மனைவி லலித குமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பிரகாஷ் ராஜ் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் எனக்கு பிரகாஷ் ராஜ் வேண்டும், அவரை விவாகரத்து செய்ய விரும்பவில்லை என்று உறுதியாக கூறி வந்தார் லலிதா குமாரி. இந்த நிலையில், தனது குடும்பத்தின் தினசரி செலவுக்குக் கூட பிரகாஷ் ராஜ் பணம் தர மறுக்கிறார். எனவே மாதம் ரூ. 2.58 லட்சம் ஜீவானம்சமாக தர வேண்டும் என்று கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அவர் அணுகினார்.
இந்த இரு மனுக்களும் நிலுவையில் இருந்து வந்தன. இதற்கிடையே பிரகாஷ் ராஜை சமாதானப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவர் இறங்கி வரவில்லை.
இந்த நிலையில் தற்போது பிரகாஷ் ராஜை விவாகரத்து செய்ய லலிதகுமாரியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதிப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
காயத்ரி ரகுராம் வழக்கு தள்ளி வைப்பு:
இந் நிலையில் விவகாரத்து கோரி நடிகை காயத்ரி ரகுராம் தொடர்ந்துள்ள வழக்கு தள்ளி வைக்கப்பட்டள்ளது.
காயத்ரி ரகுராமுக்கும், அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ள தீபக் சந்திரசேகருக்கும், 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. காயத்ரி கணவருடனேயே அமெரிக்காவில் தங்கியிருந்தார்.
இந் நிலையில் காயத்ரி ரகுராம், கணவரை பிரிந்து சென்னை வந்து விட்டார். கடந்த 10ம் தேதி சென்னை குடும்ப நல கோர்ட்டில் தனது கணவர் தீபக் சந்திர சேகரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு முதன்மை குடும்ப நல நீதிபதி ராமலிங்கம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் சந்திரசேகரை கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.