Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகர் சங்க நாடக விழா: ரஜினி பங்கேற்கிறார்!
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஆகஸ்டு 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 'நினைவலைகள்' என்ற பெயரில் நாடக விழா நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அசோகன், வியட்நாம் வீடு, ரத்தக் கண்ணீர் உள்பட பிரபல நாடகங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாடகத்திலும் முன்னணி நடிகர்கள் பங்கேற்று நடிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கடைசி நாளில் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
நாடக நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார் உறுதி செய்துள்ளார். நாடகத்தில் சில காட்சிகளில் ரஜினி தோன்றி ஆச்சர்யம் தரவிருக்கிறார்.
நாடகங்களில் நடிப்பது குறித்து ஏற்கெனவே பலமுறை ரஜினி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடகங்களை ஊக்குவிக்கவே இதை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் சூர்யா, ஸ்ரீகாந்த், பூச்சி முருகன், நம்பிராஜன், கே. ராஜன், நந்தகுமார், டி.என். கிருஷ்ணன், சுவாதி, பாத்திமா பாபு ஆகியோர் நடிகர் சங்கத்தின் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ராம.நாராயணன், காஜா மைதீன், சிவசக்தி பாண்டியன், எஸ்.ஏ. சந்திரசேகர், பெப்சி சார்பில் வி.சி. குகநாதன், சிவா, விநியோகஸ்தர் சங்கம் சார்பில் கலைப்புலி சேகரன், பாபுராவ் ஆகியோர் நேரில் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பி.ஆர்.ஓ. யூனியன் சார்பில் விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், சிங்காரவேலு, வி.கே.சுந்தர் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர்கள் சத்யராஜ், முரளி, பாக்யராஜ், எஸ்.வி. சேகர், சுந்தர்.சி, சார்லி, அலெக்ஸ், மயில்சாமி, ராம்கி, குமரிமுத்து, நடிகைகள் மும்தாஜ், அம்பிகா, பசி சத்யா, குயிலி, சி.ஐ.டி. சகுந்தலா, சத்யபிரியா, நிரோஷா, தாரிகா மற்றும் கே. ராஜன், ஜே.என். காளை, ஜே.ஆர். செல்வராஜ் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ