Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சர்வதேச பில்லியர்ட்ஸ் போட்டி நடத்தும் ஆர்கே!
இந்த சைவ அசைவ உணவகத்துடன் இணைந்து விஐபி அக்ஸஸ் கிளப் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தையும் நடத்தி வருகிறார் ஆர்கே. ஆர்கேயின் விஐபி அக்ஸஸ் கிளப்பில் சர்வதேசத் தரம் வாய்ந்த ஸ்னூக்கர் அரங்கும் அமைந்துள்ளது.
இந்த அரங்கில் தற்போது விஐபி மேட்ரிக்ஸ் ஆல் இந்தியா இன்விடேஷன் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத் தொகை வீரர்களின் ஆர்வத்தை இரட்டிப்பாக்கும் வகையில் உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் வீரருக்கு முதல்பரிசாக ரூ.1,50,000 வழங்கப்படுகிறது. இரண்டாவதாக வரும் வீரருக்கு ரூ.90,000மும், அரையிறுதி வரை வரும் வீரருக்கு ரூ.50,000மும், காலிறுதிப் போட்டி வரை வரும் வீரர்களுக்கு ரூ.25,000மும் பரிசாக வழங்கப்படும். இந்தப் போட்டியில் ஒரே விஸிட்டில் யார் அதிக புள்ளிகளை எடுக்கிறாரோ (குறைந்தபட்சம் 100க்குமேல்) அவருக்கு ரூ.25,000மும் வழங்கப்படுகிறது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றுவரை விளையாடும் வீரர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். வரும் டிசம்பர் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை 1 வாரம் நடக்கும் இந்த போட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்னூக்கர் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
பில்லியர்ட்ஸில் எட்டுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கீத் சேத்தி, 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும், தேசிய அளவில் இன்றைய ஸ்னூக்கர் சாம்பியனுமான பங்கஞ் அத்வானி, ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற ரஃபட் ஹபீப், நடப்பு மாநில சாம்பியன் எஸ்ஏ சலீம் உள்ளிட்ட 18 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் நேரடியாக போட்டிகளில் விளையாடுகின்றனர்.
இவர்களைத் தவிர தகுதிச் சுற்றுக்களில் தேர்ச்சி பெற்ற 6 வீரர்களும் இந்த சாம்பியன்களுடன் இணைந்து விளையாட உள்ளனர். இந்தப் போட்டிகள் அனைத்தும் தி.நகர், கோபாலகிருஷ்ணா தெருவில் அமைந்துள்ள ஆர்கேவின் விஐபி அக்ஸஸ் கிளப்பில் நடைபெறுகிறது.
பி.வாசு இயக்கத்தில் புதிய படம்:
இன்னொரு பக்கம் தனது புதுப்பட வேலைகளிலும் மும்முரமாக உள்ளார் ஆர்கே. அடுத்து இவர் நடிக்கும் படத்தை இயக்குபவர் பி.வாசு என்பது ஏற்கெனவே தெரிந்திருக்கும். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும். டிசம்பர் 2வது வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்குவதாகக் கூறினார் ஆர்கே.