Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
என் மீது போட்டதைப் போல ரஜினி மீது தீவிரவாத வழக்கு போட முடியுமா? சஞ்சய் தத் கேட்கிறார்
என் மீது போட்டதைப் போல ரஜினி மீது தீவிரவாத வழக்கு போட முடியுமா? சஞ்சய் தத் கேட்கிறார்
என் மீது தீவிரவாத வழக்குப் போட்டது போல ரஜினிகாந்த் மீது யாராவது வழக்கு போட முடியுமா?. போட்டால் தமிழகத்தில் சும்மா இருப்பார்களா? என்று கேட்டுள்ளார் நடிகர் சஞ்சய் தத்.
மும்பையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பாகவும், ஆயுதம் வைத்திருந்தது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் சஞ்சய் தத். தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இந்த நிலையில் வித்தியாசமான கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார் சஞ்சய் தத். இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
எனக்குப் பிரச்சினை ஏற்பட்டபோதெல்லாம் இந்தித் திரையுலகில் யாருமே எனக்கு துணை நிற்கவில்லை. யாருமே என்னை ஆதரிக்கவில்லை.
சிறைவாசத்தின்போது நான் நிறைய கற்றுக் கொண்டேன். சிறைவாசம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. இதை நான் ஒப்புக் கொள்கிறேன். பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் இருக்கக் கற்றுக் கொண்டேன்.
நான் முதன் முதலில் கைது செய்யப்பட்டபோது, என்னைப் பற்றி ஒரு திரையுலகப் பிரமுகர் கூட கவலைப்படவில்லை. என்னுடன் தொடர்பு இல்லாதது போல காட்டிக்கொள்ளவே முயன்றனர்.
பின்னர் நான் அரசியல் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டபோதும் என்னை விட்டு விலகி ஓடவே அனைவரும் முயன்றனர், விரும்பினர். அப்போதெல்லாம் அவர்கள் மீது எனக்குக் கோபம் வரும்.
ஆனால் போகப் போக நான் அதைப் பழகிக் கொண்டு விட்டேன். இப்போதெல்லாம் அதுகுறித்து நான் கவலைப்படவில்லை.
எனக்கு நானே கேட்டுக்கொள்வேன், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நாம் அவர்களை ஆதரிப்போமா என்று கேட்டுக்கொள்வேன்.
அந்த சம்பவங்களை, அந்த நாட்களை மறக்கவே முயலுகிறேன். ஒரு வேளை வேறு யாருக்காவது இப்படி நேர்ந்தால் நான் கூட இப்படித்தான் இருப்பேனோ என்னவோ தெரியவில்லை.
அதேசமயம், ஒரு துறையைச் சேர்ந்த ஒருவருக்குப் பிரச்சினை என்றால் அத்துறையைச் சேர்ந்த அனைவருமே துணை நிற்க வேண்டும். அப்படி நின்றால் இதுபோன்ற பிரச்சினைகளை தொடர்ந்து நம்மைத் துரத்திக் கொண்டிருக்காது என்று கருதுகிறேன்.
ரஜினிகாந்த் மீது யாராவது தீவிரவாத செயல் புரிந்தார் என்று வழக்கு போட முடியுமா. அப்படி செய்தால் தமிழகத்தில் என்ன நடக்கும். யாரும் அவர் மீது வழக்குப் போட முடியாது. அதுதான் ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு தமிழகத்தில் உள்ள சக்தி. ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகமே ரஜினிக்கு ஆதரவாகத் திரளும். ஆனால் பாலிவுட்டில் அப்படி இல்லை என்பது வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார் சஞ்சய் தத்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!