Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'பிக் பாஸ்' வீட்டுக்கு வரும் பமீலா ஆன்டர்சன்!
கலர்ஸ் டிவி சார்பில் நடந்து வரும் பிக் பாஸ்-4 ரியாலிட்டி ஷோவில் இப்போது கவர்ச்சி கூடவுள்ளது. ஒரு காலத்தில் தனது பெருத்த மார்பழகால் உலக இளைஞர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த பமீலா ஆன்டர்சன் இந்த நிகழ்ச்சிக்கு விசிட் அடிக்கவுள்ளார்.
இதுகுறித்து கலர்ஸ் டிவியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திங்கள்கிழமை அமெரிக்காவிலிருந்து மும்பை வருகிறார் பமீலா. பின்னர் அடுத்த வாரம் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார் என்றார்.
இங்கிலாந்தின் பிரபலமான பிக் பிரதர் நிகழ்ச்சியின் இந்திய வடிவம்தான் இந்த பிக் பாஸ். இதுவரை 3 எபிசோடுகளை முடித்து விட்ட இது தற்போது 4வது எபிசோடைக் கண்டுள்ளது.
மும்பையிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோனாவ்லா என்ற இடத்தில் உள்ள வீட்டில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3 மாதங்களுக்கு இவர்கள் வெளியுலக தொடர்பின்றி இருப்பார்கள். வீட்டிற்குள் ஏராளமான ரகசிய கேமராக்களை வைத்து இவர்களை போட்டி அமைப்பாளர்கள் கண்காணித்து வருவர்.
இப்படிப்பட்ட கேமரா ஒன்றில்தான், பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக்கும், இன்னொரு ஆண் போட்டியாளரும் ஏடாகூடமாக நடந்து கையும் களவுமாக சிக்கினர் என்பது நினைவிருக்கலாம்.