Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாழ்த்து மழையில் ஏ.ஆர்.ரஹ்மான்!
ஆஸ்கார் விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள பெருமைக்குரிய விருது கோல்டன் குளோப் விருதாகும். ஆஸ்கார் மேடைக்குச் செல்லும் நுழை வாயிலாக பார்க்கப்படுகிறது கோல்டன் குளோப்.
இத்தனை சிறப்பு மிக்க இந்த விருதைப் பெற்ற ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவர்களுக்கு உலகப் புகழ் பெற்ற கோல்டன் குளோப் விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் அடைந்துள்ளார். தமிழ், இந்தி போன்ற மொழிப் படங்களுக்கு மிகச் சிறப்பாக இசை அமைத்து பல்வேறு விருதுகளைப் பெற்ற ரஹ்மான் தற்போது உலக அளவில் விருது பெற்றுள்ளார். அவர் இசைத்துறையில் மேலும் பல வெற்றிகளைக் குவித்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் இருவரும் ரஹ்மானுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் எந்திரன் படத்துக்கும் இசை ரஹ்மான்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே!