Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜயகாந்த்தின் எங்கள் ஆசான் படத்துக்குத் தடை விதிக்க கோர்ட் மறுப்பு
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் தர வேண்டிய கடன் பாக்கியைத் தரும்வரை பட வெளியீட்டைத் தடை செய்ய வேண்டும் என காளிகாம்பாள் மூவிலேண்ட் உரிமையாளர் சுப்புராஜ் என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.
தனது மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
யுவஸ்ரீ கிரியேஷன்ஸின் தங்கராஜ் தமிழில் 'மீசை மாதவன்' படத்தை தயாரித்தார். இந்த படத்தை தயாரிக்க என்னிடம் ரூ.11/2 லட்சத்தை 24 சதவீத வட்டிக்கு வாங்கினார். இந்த கடனை அவர் இன்னும் திருப்பி தரவில்லை.
இப்போது நடிகர் விஜயகாந்த், நடிகை செரில் பிரிண்டோ நடித்த எங்கள் ஆசான் படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படம் 13-ந் தேதி (இன்று) வெளிவர உள்ளது. வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் எனக்கு தரவேண்டியுள்ளது. இந்த பணத்தை தராமல் எங்கள் ஆசான் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது, என்று கோரியிருந்தார்.
தடை விதிக்க மறுப்பு
ஏற்கனவே சிட்டி சிவில் கோர்ட்டில் கேவியட் மனுதாக்கல் செய்திருந்தார் தங்கராஜ். தனது தரப்பு வாதத்தை கேட்காமல் இந்த படம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு 7-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி அருள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
தங்கராஜ் தரப்பு வாதத்தை கேட்காமல், இந்த படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், இதுபற்றி பதில் தருமாறு தங்கராஜுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.