Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விவேக் பேச... அரங்கை விட்டு வெளியேறிய பத்திரிகையாளர்கள்!
இந்த செய்தி தெரிந்தபிறகு, போலீசாரிடம் போன விவேக் தனக்கு பாதுகாப்பு வேண்டும், கறுப்புக் கொடி காட்டுவோரை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம். மேலும் தன் மீது முட்டை வீச பத்திரிகையாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டையே ஆட்சி மேலிடமும் கொண்டிருப்பதால், உடனடியாக விவேக் கோரிக்கை ஏற்கப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை காலை விழா நடந்தபோது பிலிம்சேம்பர் தியேட்டர் வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் பாதிப் பத்திரிகையாளர்கள் அரங்குக்குள் நுழையாமல் வெளியிலேயே நின்றனர். கறுப்புக் கொடி ஏதும் காட்டவில்லை.
விழா துவங்கியதும், வி.சி.குகநாதன் மற்றும் ஆர்.கே. செல்வமணி போன்றோர், விவேக்குடன் பத்திரிகையாளர்கள் பேச்சு நடத்தி பிரச்சினையைத்த தீர்த்துக் கொள்ளலாம். மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது நல்லதல்ல என்றெல்லாம் கூற, கடுப்பான ஒரு நிருபர், "விழாவுக்குத் தேவையானதை மட்டும் பேசுங்க. தேவையில்லாத பேச்சு வேண்டும். அந்த நடிகருடனான பஞ்சாயத்தை நாங்க பாத்துக்குறோம்!" என்றதும் அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள்.
பின்னர் மைக் பிடிக்க வந்தார் விவேக். பெரிய பத்திரிகை, சின்ன பத்திரிகை என்ற பேதமில்லாமல் அனைவரும் சடாரென வெளியே, வெறிச்சோடியது பிலிம்சேம்பர் வளாகம்!.