Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அரவான் மூலம் தமிழுக்கு வரும் கபீர் பேடி!
வசந்தபாலனின் அரவான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரபல இந்திய - ஹாலிவுட் நடிகர் கபீர் பேடி.
சர்வதேச அளவில் பெரிதும் அறியப்பட்ட முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவர் கபீர் பேடி.
அங்காடித் தெரு படத்துக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கும் படம் அரவான். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி உட்பட பலர் நடிக்கிறார்கள்.
18-ம் நூற்றாண்டு தமிழர்களின் வாழ்க்கையை, கலாசாரத்தை, காதலை சொல்லும் இந்தப் படத்துக்கு பின்னணி பாடகர் கார்த்திக் முதல்முறையாக இசை அமைக்கிறார்.
இதில் வில்லனாக நடிக்க, இந்தி நடிகர் கபீர் பேடியிடம் பேசி வந்தனர். சமீபத்தில் அவரிடம் கதை சொன்னார் வசந்தபாலன். கண்டிப்பாக நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார் கபீர் பேடி. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங் அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது.
இதுகுறித்து இயக்குநர் வசந்தபாலன் கூறுகையில், "இந்தக் கதையைக் கேட்டபோதே அவர் மறுபேச்சின்றி நடிக்க ஒப்புக் கொண்டார். ஹீரோவுக்கு நிகரான முக்கியத்துவம் அவரது பாத்திரத்துக்கு" என்றார்.