Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ.45 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஷில்பா ஷெட்டி மீது வழக்கு!
ராஜ் குந்த்ரா என்ற தொழில் அதிபரை காதலிக்கும் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, சமீபத்தில் இங்கிலாந்தில் ஏராளமான கிளைகளுடன் இயங்கி வரும் டிபன்பைட்ஸ்' என்ற பாஸ்ட் புட் உணவகத்தை,காதலருடன் சேர்ந்து விலைக்கு வாங்கினார். ரூ.45 கோடி கொடுத்து, உணவகத்தின் 33 சதவீத பங்குகளை இருவரும் வாங்கியுள்ளனர். இதையடுத்து, உணவகத்தின் இணைத் தலைவராகவும் ஷில்பா பொறுப்பு ஏற்றுள்ளார்.
இந்த உணவகத்தை நிறுவியவர் ஜமால் ஹிரானி (வயது 42). ஷில்பா ஷெட்டிக்காக, ஜமால் ஹிரானியை அவரது பங்குதாரர்களே வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டனர்.
இதையடுத்து, ரூ.45 கோடி நஷ்டஈடு கேட்டு, ஷில்பா ஷெட்டி மீது லண்டன் ஐகோர்ட்டில் ஜமால் ஹிரானி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து ஜமால் ஹிரானி கூறியதாவது,
என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி எனது கூட்டாளிகள் என்னை வலுக்கட்டாயமாக நீக்கி விட்டனர். அப்போது மூடப்பட்ட உணவகம், பிறகு வேறு பெயரில் திறக்கப்பட்டது. தற்போது இந்த உணவகத்தில் ஷில்பா ஷெட்டி முதலீடு செய்திருப்பதாக அறிந்தேன். அவருக்காகத்தான் என்னை நீக்கி உள்ளனர்.
ஆகவே, ரூ.11 கோடி நஷ்டஈடு கேட்டு, நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொழிற்சாலை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தேன். தற்போது, ரூ.45 கோடி நஷ்டஈடு கேட்டு லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். உணவகத்தில் நான் முன்பு வைத்திருந்த 30 சதவீத பங்குகளின் அடிப்படையில் இவ்வழக்கை தொடர்ந்துள்ளேன் என்றார்.
ஜமால் ஹிரானியின் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் உணவகத்தை வாங்குவதற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களுக்காக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும்" என்றார்.