Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
''பெரியார் முன் கை..அண்ணா முழங்கை''
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது. இதையொட்டி 'கலைஞர் டி.வி.' சார்பில் கருத்தரம் நடைபெற்றது.
இதற்கு தலைமை தாங்கி கவிஞர் வாலி பேசுகையில்,
முதன்முதலில் இந்த சமுதாயத்தின் அவலங்களை சுட்டிக்காட்ட கையை நீட்டியவர் பெரியார். பெரியார் முன் கை என்றால் அதைத் தொடர்ந்து நீண்ட முழங்கை அண்ணா. அந்த முன் கை, முழங்கை இரண்டும் இணைந்த முழுக் கை கலைஞர் கருணாநிதி.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் நாணையத்தை வெளியிட முதல்வர் ஏற்பாடு செய்திருக்கிறார். அண்ணா வாழும் நாள் வரை நாணையத்துடன் வாழ்ந்தார். ஆகவே தான் அவருக்கு 5 ரூபாய் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகிறார் கருணாநிதி என்றார்.
பி்ன்னர் கருணாநிதி அண்ணா விருது பெற பெரிதும் காரணமாய் இருப்பது பகுத்தறிவு கொள்கை என்று மந்திரி அமைச்சர் ராசாவும், ஏழைகளுக்கு உழைப்பதுதான் என்று அமைச்சர் பொன்முடியும், பேச்சாற்றல்தான் என்று மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகனும், எழுத்தாற்றல் தான் என்று கவிஞர் வைரமுத்துவும், கட்டுக்கோப்பாய் வைத்திருத்தல்தான் என்று முன்னாள் அமைச்சர் தென்னவனும், அரசியல் நாகரீகம்தான் என்று சுப.வீரபாண்டியனும் பேசினார்.
இரண்டை மணி நேரம் நடந்த இந்த கருத்தரங்கை முதல்வர் கருணாநிதியும் நடிகர் ரஜினியும் கண்டுகளித்தனர்.