Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'தாத்தா'வை ஹீரோவாக்கும் சசிக்குமார்!
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்த புத்திசாலி சசிக்குமார். இயக்குநராக, தயாரிப்பாளராக, நடிகராக அந்தப் படத்தில் அசத்திய சசிக்குமார், இப்போது நாடோடிகள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டார்.
இடையி்ல் பசங்க படத்தை தயாரித்து வெளியிட்டு அதையும் ஹிட்டாக்கி சசிக்குமார் இப்போது தனது நான்காவது படைப்புக்குத் தயாராகி விட்டார்.
இந்தப் படத்தின் இயக்குநர் இவர்தான். ஆனால் படத்தில் நடிக்கவில்லை. இயக்குநர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படத்தை தமிழ் தவிர இந்தியிலும் ஒரே நேரத்தில் இயக்கி அகலக் கால் வைக்கிறார் சசிக்குமார்.
படத்தின் முக்கிய விசேஷம் என்னவென்றால் சிக்கென்ற இளைஞர்கள் யாரும் இதில் ஹீரோவாக நடிக்கவில்லை. மாறாக 54 வயது முதியவர்தான் இப்படத்தின் நாயகனாம். அந்த நாயகன் ஒரு புதுமுகமாம். அந்தக் கேரக்டருக்குரியவரைத் தேடிக் கொண்டிருக்கிறாராம் சசி. கிடைத்தவுடன் படப்பிடிப்பு தொடங்குமாம்.
கிரியேட்டிவ் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் ரீமிக்ஸ், ரீபிக்ஸ் என்று ஜிம்மிக்ஸ் செய்து கொண்டிருப்போர், சசிக்குமாரிடம் கேட்டு பாடம் கற்றுக் கொண்டால் நல்லாருக்கும்...