Don't Miss!
- News நாளை மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம்! சத்யபிரத சாகு தகவல்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'தாத்தா'வை ஹீரோவாக்கும் சசிக்குமார்!
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்த புத்திசாலி சசிக்குமார். இயக்குநராக, தயாரிப்பாளராக, நடிகராக அந்தப் படத்தில் அசத்திய சசிக்குமார், இப்போது நாடோடிகள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டார்.
இடையி்ல் பசங்க படத்தை தயாரித்து வெளியிட்டு அதையும் ஹிட்டாக்கி சசிக்குமார் இப்போது தனது நான்காவது படைப்புக்குத் தயாராகி விட்டார்.
இந்தப் படத்தின் இயக்குநர் இவர்தான். ஆனால் படத்தில் நடிக்கவில்லை. இயக்குநர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படத்தை தமிழ் தவிர இந்தியிலும் ஒரே நேரத்தில் இயக்கி அகலக் கால் வைக்கிறார் சசிக்குமார்.
படத்தின் முக்கிய விசேஷம் என்னவென்றால் சிக்கென்ற இளைஞர்கள் யாரும் இதில் ஹீரோவாக நடிக்கவில்லை. மாறாக 54 வயது முதியவர்தான் இப்படத்தின் நாயகனாம். அந்த நாயகன் ஒரு புதுமுகமாம். அந்தக் கேரக்டருக்குரியவரைத் தேடிக் கொண்டிருக்கிறாராம் சசி. கிடைத்தவுடன் படப்பிடிப்பு தொடங்குமாம்.
கிரியேட்டிவ் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் ரீமிக்ஸ், ரீபிக்ஸ் என்று ஜிம்மிக்ஸ் செய்து கொண்டிருப்போர், சசிக்குமாரிடம் கேட்டு பாடம் கற்றுக் கொண்டால் நல்லாருக்கும்...